பக்கம் எண் :

80கவிமணியின் கவிதைகள்

Untitled Document
67. உத்தம ஜீவிதம்
490 கருத்திலெழும் அரியஉருக் கவின் கொளநற்சிலையிற்
     கண்காணக் காட்டிடவே கைவருந்தி நாளும்,
அருத்தியொடு மெய்த்தளர்வும் அகத்தளர்வும் பாராது
     ஆமளவும் முயன்றிடுவர் தோமறுசிற்பியரே.

491 அருமையிலும் பெருமையிலும் அழகிய தன்மையிலும்
     அகத்திலெழுந்த தொளிர்வடிவப் புறத்தகமைக்கச்சமைந்தே,
உரிமைபெறும் ஓவியமும் உருவாக்க வல்லார்
     உறுதுயரும்படும்பாடும் உலகிலெவர் அறிவார்?

492 பெருமைபெறு திருக்கோயில் பெட்புறவே அமைக்கும்
     பேராளன், அத்தளியின் பெரியசின கரங்கள்
ஒருமைகொள உயர்வானம் உறுமளவும் எழவே,
     உயிர்வாழும் நாள்முழுதும் உதவிடினும் வருந்தான்.

493 இமையவரின் உலகுதனில் இருந்துவரு மருந்தாய்
     இதயமிதில் எழுமினிய இறும்பூதின் மயமாய்
அமையவொரு கவிபாட அரியபெரும் புலவர்,
     அடைவருத்தம் செல்காலம் அணுவேனும் மதியார்.

494 கல்லுருவும் பொடியாகும்; காண்படமும் மங்கும்;
     கண்களிக்கும் திருத்தளியும் மண்குளிக்கும் திண்ணம்;
சொல்லினொரு நூறாண்டு செல்லுவதும் அரிதாம்;
     சொந்தமெனப் புலவர்தரு சந்தமுற கவியே.

495 சீவிதத்தை விதியதனைத் திறமுறவே திருத்தும்
     திவ்வியநற் சீவான்ம சிற்பியரும் யாமே;
மூவுலகில் எக்காலும் மூவாத பொருளில்
     முயற்சியொடு பயிற்சிதரும் மொய்ம்புடையோர்யாமே,

496 ஆதலால் எந்நாளும் அழியாத பொருளாம்
     ஆன்மாவை மேம்படுத்தி, அறநெறியில் நின்று.
தீதெலாம் அறவொதுக்கித் திருவருளும் பெற்றுச்
     சிவஞானச் செல்வரெனத் தினம் வாழுவோமே.