முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 83 |
Untitled Document
513 | | மேட்டு நிலங்களிலே - தினைக்கதிர் விம்மி விளைகையிலே, காட்டு மயில் வரவே - குகனும் என் காதல் விளைவிப்பார், அடி! |
514 | | காவுயர் சோலையிலே - பசுவொடு கன்று களிக்கையிலே, தாவிப் புலிவிழவே - வருந்துயர் தாங்க முடியவில்லை. |
515 | | புல்வளர் கானத்திலே - கலையினம் பொங்கிக் குதிக்கையிலே, கொல்கடு வாய்வரவே - நெஞ்சத்தில் கூரம்பு பாய்ந்ததடி! |
516 | | குஞ்சரக் கூட்டத்திலே - ஒன்றையொன்று குத்திப் பொருகையிலே, வெஞ்சின மாவரவே - அதிலுள்ளம் வெம்பி அழிந்ததடி! |
517 | | வானுயர் காவினிலே - மதுவினை வண்டுகள் சேர்க்கையிலே, கானவர் வந்திடவே - உதிரம்என் கண்கள் சொரிந்ததடி! |
518 | | தேரைகள் ஓடையிலே - இனத்தொடு சேர்ந்து மிதக்கையிலே, நாரைகள் வந்திடவே - பாவிமனம் நைந்து குழைந்ததடி! |
70. ரோஜாவே ஏன் வாடுகிறாய்? |
519 | | கள்ளன் வந்தான், கள்ளன் வந்தான், கதவை யுடைத்தான் - வீட்டுக் கதவை யுடைத்தான்; கொள்ளை யிட்டென் பொருளை யெல்லாம் கொண்டு போய்விட்டான் - ஐயோ! கொண்டு போய்விட்டான். | |
|
|