Untitled Document
520 | | கத்தி காட்டிக் காத்து நின்ற காவ லாளரைப் - பல காவ லாளரை, எத்தி விட்டுப் பறந்து சென்றான்; என்ன மாயமோ? - ஐயோ! என்ன மாயமோ? |
521 | | காலையெழும் கதிரவனும் கண்டதில்லையோ? - இதைக் கண்டதில்லையோ? ஓலமிட்டுங் கேட்கவில்லை; ஓடுகின்றானே - ஐயோ! ஓடுகின்றானே. |
522 | | பூவுலகில் வாழ்ந்ததினிப் போதும், போதுமே - எனக்குப் போதும், போதுமே; தேவர்திரு வடிபணியச் செல்லுகின்றேனே - இதோ செல்லுகின்றேனே. |
523 | | கற்றுத் தெளிந்தநல் மானிடரே! - எம்மைக் காக்கப் பிறந்த பெரியோரே! சற்றும் அறிவிலா எம்மொழிக்குச் - செவி சாய்க்கத் திருவுளம் கொள்வீரே! |
524 | | வளர்ந்து வரும்வாலை வெட்டி வெட்டித் - தேய்ந்த மாறுபோல் ஆக்கிக் குறைத்திடும்நீர், தளர்ந்த பொழுதெங்கள் ஈப்பகை ஓட்டிடத் தக்க உதவிகள் செய்வ துண்டோ? |
525 | | இரும்புக் கடிவாளம் மாட்டுவதேன்? - வாயை ஈசன் படைத்த திதற்காமோ? பெரும்புவி மீதினில் உங்களுக்கும் - இந்தப் பேதைகள் செய்த பிழைகள் உண்டோ? | |
|
|