பக்கம் எண் :

86கவிமணியின் கவிதைகள்

Untitled Document
534 வண்டியில் கொண்டெமை மாட்டுகின்றீர் - காலை
     மாலையெல்லாம்தட்டி ஓட்டுகின்றீர்;
நொண்டினா லும் விட்டுப் போகமாட்டீர் - உடல்
     நோவ அடித்து வெருட்டுகின்றீர்.

535 மோட்டார் வண்டிவந்தும் மோட்சமில்லை - நாங்கள்
     முன்செய்த தீவினைக் கென்செய்குவோம்;
ஏட்டா லெழுத அடங்கிடுமோ - கஷ்டம்
     யாரிடம் சொல்லி அழுதிடுவோம்?

536 கோடிகோடி ஸைக்கிள் வந்திடினும் - எங்கள்
     கூட்டத்துக் கேதுமோர் நன்மையுண்டோ?
ஓடிஓடி உயிர்ஓய்ந்திடவோ - எம்மை
     உண்டாக்கி விட்டான் உடையவனே?

537 மேடு பள்ளங்களில் ஓடவேண்டும் - வெய்ய
     வேனில் மழைகளில் ஓடவேண்டும்;
காடுசெடிகளில் ஓடவேண்டும் - இந்தக்
     கஷ்டங்கள் யாரிடம் சொல்வோம், ஐயா!

538 கொட்டகை கூடாரம் போட்டுக் கொள்வீர் - அதில்
     கூத்தாடிக் கூத்தாடி ஓடச் சொல்வீர்;
பட்டினியாக இறந்திடினும் - இந்தப்
     பாடடெவர் பட்டுப் பிழைப்பர்? ஐயோ!

539 ஆங்காரத் தாலும் பேராசையாலும் - நீங்கள்
     அண்டைஅரசரைப் போர்க்கிழுத்தால்,
தாங்காத் துயரெலாம் தாங்கிச்சலித்து - யாம்
     சாவதும் எங்கள் தலைவிதியோ?

540 கல்இளைப் பாறியே நிற்கவொட்டீர் - வாயிற்
     கௌவிய புல்லையும் தின்னவொட்டீர்;
மூலை முடக்கென்றும் எண்ணமாட்டீர் - எம்மை
     மூச்சு விடாமல் துரத்துவீரே.

541 அழக்குக் காணம் அளித்திடுவீர் - அதற்கு
     ஆயிரம் வேலையும் இட்டிடுவீர்;
ஏழைக் கிரங்கெனும் நீதிமொழி - நீங்கள்
     ஏட்டில் படித்தததை ஏன்மறந்தீர்?