14 | பெரியோர் வாழ்விலே | சிறு வயதிலேயே அவன் இவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தான் என்றால் பெரியவனானதும் அவனைப் பற்றிக் கேட்க வேண்டுமா? மிக மிகக் கெட்டிக்காரனாக, உலகம் போற்றும் விஞ்ஞானியாகவே அவன் விளங்கினான் !
‘செடி கொடிகளுக்கு உயிரில்லை ; உணர்ச்சியில்லை. ஒரு செடியை நாம் ஊசியால் குத்தினால் அது வருந்தாது ; கத்தியால் வெட்டினால், அது துடிக்காது’ என்றுதான் உலகம் முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், ‘செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உயிருண்டு; உணர்ச்சி உண்டு ; இன்ப, துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சக்தி உண்டு’ என்னும் உண்மையை உலகம் அறிய ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியவர் யார் தெரியுமா? ஜகதீஸ் சந்திரபோஸ் என்ற நம் இந்திய விஞ்ஞானிதான் !
அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றித்தான் நாம் இவ்வளவு நேரமாகப் படித்தோம் ! | (ஜகதீஸ் சந்திரபோஸ் ) |  |
|
|
|
|