பக்கம் எண் :

எட்டு ரூபாயில் படித்தவர்

17


தான் !  புத்தகங்கள் வாங்குவதும் அந்த எட்டு ரூபாயில்தான் ! 

     தானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தான். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான்
சாப்பிடுவான். மற்ற வேளைகளிலெல்லாம் பட்டினிதான் ! 

     இரவில் படிப்பதற்கு எண்ணெய் வாங்க முடியாது. ஆகையால், தெரு விளக்கின்
அடியிலே உட்கார்ந்து பாடம் படிப்பான். தெரு விளக்கிலே படித்தாலும் தன்னுடைய
பதினெட்டாம் வயதிலேயே பி.ஏ. பட்டம் பெற்று விட்டான் !  தெரு விளக்கில் படிப்பதைப்
பற்றிச் சொன்னதும், உங்களுக்கு, சர். டி. முத்துசாமி ஐயர் ஞாபகம் வருகிறதல்லவா?
வரும் ;  வரும்.

     இந்தப் பையனும் பிற்காலத்தில் சாதாரண மனிதனாக இருக்கவில்லை. சிறந்த
அறிஞர் ;  உயர்ந்த தலைவர் ;  பெரிய இராஜதந்திரி ;  நல்ல பரோபகாரி என்றெல்லாம்
புகழப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே தான், தெரு விளக்கில் படித்த அந்த ஏழைப்
பையன் ! 


* * *
 

     அன்று கோகலேயின் பள்ளி ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து, “பிள்ளைகளே,
நாளை வரும்போது இந்தக் கணக்கைப் போட்டுக்கொண்டு வர வேண்டும். சரியாகப்
போட்டுக்கொண்டு வர வேண்டும். இல்லையேல் உங்களை நன்றாகத் தண்டிப்பேன்,
தெரியுமா?” என்று எச்சரித்திருந்தார்.