பக்கம் எண் :

எட்டு ரூபாயில் படித்தவர்

21


நேரமில்லை. ஆகையால் ஐந்து நிமிஷத்தில் திரும்பி விடுவது என்ற எண்ணத்துடன்
கோகலேயைக் கண்டார்.

     கோகலே அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார். கோகலேயின் பேச்சு
இனிமையாகவும், நன்றாகவும் இருந்ததால், நீதிபதிக்கு நேரம் போனதே தெரிய வில்லை ! 

     பேச்சு முடிந்து வெளியில் வந்ததும், நீதிபதி கடிகாரத்தைப் பார்த்தார். சரியாக
முப்பத்தைந்து நிமிஷங்கள் பறந்துவிட்டன என்பதை அப்போது தான் அவர்
உணர்ந்தார் ! 
 

* * *
 

     ஆசிரியர் வேலை பார்க்கும் போது, ஆங்கிலம், கணிதம், சரித்திரம், பொருளாதாரம்
முதலிய பாடங்களை அவர் மிகவும் அழகாகச் சொல்லிக் கொடுப்பார்.

     கோகலே சரித்திரப் பாடம் நடத்தும் போது, முன்காலத்துச் சரித்திரத்தை மட்டும்
கூறமாட்டார். தற்போது நம் நாட்டுச் சரித்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துக்
காட்டுவார். இப்படியாக மாணவருக்கு நாட்டுப் பற்று, தியாக உணர்ச்சி, வீரம்
முதலியவற்றையும் ஊட்டி வந்தார்.

     ஒரு சமயம், அவர் கப்பலைப் பற்றியும், கடலைப் பற்றியும் பாடம் நடத்த
வேண்டியிருந்தது. கடலைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால்,