பக்கம் எண் :

22

பெரியோர் வாழ்விலே


கப்பலைப் பற்றி அவருக்குச் சரியாகத் தெரியாது. கப்பலில் உள்ள பாகங்களையும் அவர்
பார்த்ததில்லை. அதனால், அவற்றைப் பற்றி மாணவர்களுக்குச் சரியாக விளக்கிக் கூற
முடியாது என நினைத்தார். உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

     பூனாவிலிருந்து மறுநாளே பம்பாய்க்குப் புறப்பட்டார். அங்குள்ள துறைமுகத்துக்குச்
சென்றார். துறைமுகத்தில் நின்ற கப்பலுக்குள் அனுமதி பெற்றுச் சென்றார். கப்பலின்
ஒவ்வொரு பகுதியையும் நேரிலே பார்த்தார். அவற்றின் உபயோகங்களையும் விளக்கமாகத்
தெரிந்து கொண்டார். பிறகு தான், பூனாவுக்குத் திரும்பினார் ;  கப்பலைப் பற்றி
மாணவர்களுக்கு மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூறினார். ஒவ்வொரு
மாணவனும் அவர் கற்பித்த பாடங்களை நன்றாகப் புரிந்து கொண்டான்.

     கோகலே தமக்குத் தெரியாத ஒரு பொருளைத் தெரிந்தது போல் காட்டிக்
கொள்ளமாட்டார் என்பதும், எந்த வேலையைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்வார்
என்பதும், மாணவர்களின் அறிவை வளர்க்க மனமாரப் பாடுபட்டார் என்பது இதிலிருந்தே
தெரிகிறதல்லவா?


(கோபாலகிருஷ்ண கோகலே)