சொந்தக் கையிலே சூடு போட்டுக் கொண்டவர் | 37 | படேல் பாரிஸ்டராக இருந்து தொழில் நடத்தும் போது அவருக்கு நல்ல வருமானம் வந்தது. வாதாடுவதிலும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதிலும் அவர் மிகவும் கெட்டிக்காரர் என்று கூறுவார்கள்.
ஒரு சமயம் மடாதிபதி ஒருவர், யாரோ ஒருவரைக் கொலை செய்து விட்டதாக ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் மடாதிபதிக்காகப் படேல் ஆஜரானார். வெள்ளைக்காரர் ஒருவர் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்து வழக்கை நடத்தினார்.
மடாதிபதி நிரபராதி என்றும், போலீசார் வேண்டுமென்றே அந்த வழக்கைக் கற்பனை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் படேல் அறிந்து கொண்டார். மடாதிபதியைக் காப்பாற்ற வேண்டியது தம் கடமை என்று கருதினார்.
போலீசார் எட்டு சாட்சிகளைக் கொண்டு வந்தனர். ஏழு சாட்சிகளும் போலீசார் சொல்லிக் கொடுத்தபடி ஒப்புவித்தனர். எட்டாவது சாட்சி ஒரு மணியக்காரர். அவர் கொலை நடந்ததைப் பார்த்ததாகக் கூறும்போது படேல் கவனமாகக் கேட்டார். போலீசார் அவருக்கு மட்டும் சரியாகப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்பதை ஊகித்து அறிந்தார். உடனே, திடீரென்று அவரைக் குறுக்குக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அந்த மணியக்காரர் முன்னுக்குப் பின் முரணாக உளறுவதைக் கண்டதும், போலீசார் பயந்து போயினர். வெள்ளைக்கார மாஜிஸ்ட்ரேட்டும் போலீஸாருக்குச் சாதகம் செய்ய நினைத்தார். உடனே, “நீர் முதலில் |
|
|
|
|