40 | பெரியோர் வாழ்விலே | அது மிகவும் நயமாக அமைந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது.
‘இந்தப் பாட்டை நாம் யாரிடமாவது காட்ட வேண்டும். அவர்களுடைய கருத்தை அறிய வேண்டும்’ என்று நினைத்தான்.
ஆனால், பிறரிடத்தில் காட்டுவதற்கு அவனுக்குக் கூச்சம் ; காட்டாமல் இருக்கவும் மனமில்லை.
சிறிது நேரம் சிந்தித்தான் ; இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தான்.
அதன்படி, மறுநாள் மிகவும் சீக்கிரமாக அதாவது எல்லோருக்கும் முன்பாகப் பள்ளிக்குச் சென்றான் ; தான் இயற்றிய பாட்டை ஒரு தாளில் எழுதினான் ; ஆசிரியர் உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்து விட்டுத் தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
சிறிது நேரம் சென்று மற்றொரு மாணவன் அங்கு வந்தான். அவன் தரையில் காகிதத்தில் ஏதோ எழுதிக் கிடப்பதைக் கண்டான். உடனே அதை எடுத்தான் ; படித்தான் ; பிறகு தமிழாசிரியரிடம் அதைக் கொண்டு போய்க் கொடுத்தான்.
தமிழாசிரியர் பாட்டைப் படித்துப் பார்த்தார். “அடடா ! இந்தப் பாடல் எவ்வளவு அழகாயிருக்கிறது ! இதை இயற்றிய கவிஞர் யார்? பெயர் போடவில்லையே !” என்று சொல்லிவிட்டுத் திரும்பத் திரும்ப அதைப் பாடி மகிழ்ந்தார் ; மாணவர்களுக்கும் அதைப் பாடிக் காட்டினார் ; பாட்டில் உள்ள சொல் அழகையும் பொருள் அழகையும் எடுத்துக் கூறினார். |
|
|
|
|