பக்கம் எண் :

பதினோரு வயதில்
பாட்டுக் கட்டியவர் ! 


     அப்போது தாகூருக்குப் பதினோரு வயதுதான் இருக்கும். அந்த வயதிலேயே அவர்
அழகாகப் பாட்டுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டார் ! 

     அவருடன் படித்த மாணர்களில் சிலர், “அடடா !  இவன் எவ்வளவு அழகாகப்
பாடல்கள் எழுதுகிறான் !”  என்று புகழ்ந்தார்கள். சிலர், “இவனாவது ;  பாட்டு
எழுதுவதாவது ! யாரோ இயற்றிய பாடல்களை எழுதி வைத்துக்கொண்டு கதை
அளக்கிறான் !”  என்றனர்.