பதினோரு வயதில் பாட்டுக் கட்டியவர் | 59 | ஒருநாள், அவள் இரண்டு அணிற் பிள்ளைகளை வாங்கினாள். அவற்றைக் கூண்டிலே போட்டு அடைத்து வைத்திருந்தாள். அச்செயல் தாகூருக்குப் பிடிக்கவில்லை. ஆனந்தமாக ஓடியாடித் திரியும் அணிற்பிள்ளைகளை அடைத்து வைப்பதை அவர் விரும்பவில்லை.
“அண்ணி, அந்த அணிற் பிள்ளைகளைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. வேண்டாம். இவற்றை விட்டுவிடு” என்று கெஞ்சிப் பார்த்தார்.
“பேசாமல் வாயை மூடிக்கொண்டு போ. உன் பேச்சைக் கேட்க நான் தயாராக இல்லை” என்று கூறிவிட்டாள் அண்ணி.
“சரி. வரட்டும், அண்ணிக்கு வாயால் சொன்னால் சரிப்படாது” என்று மனத்திற்குள்ளேயே கூறிக் கொண்டார் தாகூர்.
அன்று அண்ணி வெளியே போயிருந்தாள். அப்போது தாகூர் கூண்டின் அருகே மெதுவாகச் சென்றார். கூண்டைத் திறந்து இரண்டு அணிற்பிள்ளைகளுக்கும் விடுதலை அளித்து விட்டார். ‘ஆனந்த சுதந்தரம் அடைந்துவிட்டோம்’ என்று அவை ஆடிக் குதித்துக் கொண்டே ஓடி மறைந்துவிட்டன !
அண்ணி வீடு வந்ததும், கூண்டு வெறுங் கூண்டாக இருப்பதைப் பார்த்தாள். உடனே, தாகூருடன் போர் தொடுத்தாள். அண்ணி திட்டியதைக் கேட்டு தாகூர் வருந்தவில்லை. தாம் செய்த செயலை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.* * * |
|
|
|
|