பழமொழிகள் பேச்சின் ஊடே மிகப் பொருத்தமாக
ஒரு
குறிப்பிட்ட நோக்கம் கருதிப் பயன்படுத்தப்படுகிறது. ’சில
வேளைகளில் ஒரு செயலைச் செய்வதற்கு முன்னதாகவே
எச்சரிக்கின்றது; சில வேளைகளில் ஒருவனின் செயலை
நையாண்டி செய்கின்றது; ஒன்றைச் செய் என்று தலையில்
அடித்தாற்போல் நேரடியாகக் கட்டளை இடுகின்றது. செய்யாதே
என்று தடுக்கின்றது. மறைமுகமாக யாருக்கோ சொல்வது போல
எச்சரிக்கின்றது, பெரியோர்கள் இப்படித்தான் சொல்லி
வைத்துள்ளார்கள். இப்படிச் செய்வது நடைமுறைப் பழக்கம்
என்பது போல வாழ்க்கை அனுபவத்தைச் சுருக்கித் தருகிறது.
’பழமொழி
பொய்யானா பழையதும் சுடும்’ என்ற பழமொழி
பற்றிய பழமொழி தற்காலத்திலும் மக்கள் அதன் மேல்
கொண்டுள்ள அழுத்தமான நம்பிக்கையைத் தெளிவாகப்
புலப்படுத்தும் அரிய சான்றாகும். பழமொழி ஒரு பொழுதும்
பொய்யாகாது’ (தே. லூர்து 1988 24, 25) பழமொழிகள்
பயன்படுத்தப்படும் சூழல் மிகவும் இன்றியமையாதது. சூழல்
பின்னணி தெரியாமல் பழமொழிக்குப் பொருள் கூறுவது
தவறாகவே முடியும். எனவே சூழல் விளக்கங்களோடு அவை
மக்களிடையே எவ்வாறு பயன்படுகின்றன என்பதைச் சில
சான்றுகள் வாயிலாகக் காணலாம்.
5.2.1.
இடித்துரைத்தல்
(அ) மகன்
(சிறுவன்) உருப்படியான வேலை எதுவும் இல்லாமல்
விளையாடிக் கொண்டு திரிந்தான். அதனைப் பார்த்த தந்தை
அவனிடம்,
நாய்க்கு
வேலையில்ல நிக்க நேரமில்ல
என்று
கூறினார்.
இந்தப்
பழமொழியின் நேரடிப் பொருள் நாயின் இயல்பைச்
சுட்டுவதாக உள்ளது. எந்த வேலையும் இல்லாமல் தெரு நாய்
அங்குமிங்கும் சுற்றிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்தில் நிற்பதற்கு
அதற்கு நேரமிருக்காது என்பதேயாகும். இங்கு மகனும்
அவ்வாறே ஓரிடத்தில் நில்லாமல் வீணாகச் சுற்றிக்
கொண்டிருப்பதாகத் தந்தை சுட்டிக்காட்டி இடித்துரைத்து
அவனுக்கு அறிவு கூறும் போக்கு காணப்படுகிறது.
(ஆ)
ஒரு குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சனை மிகுதியாக
இருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே
பெற்றோர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில்
வீட்டில் உள்ள பிள்ளை ஆடம்பரமான பொருள் ஒன்றினை
வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடிக்கிறது. இந்நிலையில்
அப்பிள்ளையின் தந்தை பின்வரும் பழமொழியைக் கூறினார்.
|