தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்க விளைவோரை ஊக்குவிக்க நிதியுதவி அளிப்பது இதன் நோக்கமாகும். அதோடுமட்டுமல்லாமல் ஏற்கனவே உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருளை மேம்படுத்த அது தனிநபராக இருந்தாலோ அல்லது நிறுவனமாக இருந்தாலோ இவ்வூக்கத்தொகை அளிப்பது இதன் நோக்கமாகும்.
இந்த நிதிநல்கை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படுகின்ற நிறுவனங்களுக்கும், மைய அரசின் உதவியோடு இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் செயல்படும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
- 6493 Reads