முகப்பு |
கச்சிப் பேட்டு நன்னாகையார் |
30. பாலை |
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், |
||
பொய்வலாளன் மெய் உற மரீஇய |
||
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, |
||
அமளி தைவந்தனனே; குவளை |
||
வண்டு படு மலரின் சாஅய்த்' |
||
தமியென்; மன்ற அளியென் யானே! |
உரை | |
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி |
172. நெய்தல் |
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் |
||
பழுமரம் படரும் பையுள் மாலை, |
||
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் |
||
தமியர் ஆக இனியர்கொல்லோ? |
||
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த |
||
உலை வாங்கு மிதி தோல் போலத் |
||
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. |
உரை | |
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார் |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
192. பாலை |
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என, |
||
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
||
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
||
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
||
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
||
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
197. நெய்தல் |
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக |
||
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை |
||
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய |
||
கூதிர் உருவின் கூற்றம் |
||
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? |
உரை | |
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
287. முல்லை |
அம்ம வாழி-தோழி-காதலர் |
||
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ- |
||
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ |
||
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் |
||
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, |
||
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி, |
||
செழும் பல் குன்றம் நோக்கி, |
||
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார். |