முகப்பு |
கோப்பெருஞ்சோழன் |
20. பாலை |
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், |
||
உரவோர் உரவோர் ஆக! |
||
மடவம் ஆக, மடந்தை, நாமே! |
உரை | |
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன் |
53. மருதம் |
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
||
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
||
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
||
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
||
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
||
நேர் இறை முன்கை பற்றி, |
||
சூரரமகளிரோடு உற்ற சூளே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
129. குறிஞ்சி |
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! |
||
புலவர் தோழ! கேளாய் அத்தை; |
||
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் |
||
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக் |
||
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல் |
||
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
147. பாலை |
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன |
||
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, |
||
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, |
||
இன் துயில் எடுப்புதி-கனவே!- |
||
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. |
உரை | |
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன் |