முகப்பு |
நெல்லி |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
தளை அவிழ் பல் போது கமழும் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
235. பாலை |
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
||
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
||
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
||
மரையினம் ஆரும் முன்றில் |
||
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. |
உரை | |
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
317. குறிஞ்சி |
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு |
||
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது |
||
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, |
||
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் |
||
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக |
||
வட புல வாடைக்கு அழி மழை |
||
தென் புலம் படரும் தண் பனி நாளே? |
உரை | |
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன் |