முகப்பு |
மூங்கில் (வேரல், கழை, அமை, வேய்) |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
54. குறிஞ்சி |
யானே ஈண்டையேனே; என் நலனே, |
||
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
||
கான யானை கை விடு பசுங் கழை |
||
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
||
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |
74. குறிஞ்சி |
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
||
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
||
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
||
வேனில் ஆனேறு போலச் |
||
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. |
உரை | |
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
131.பாலை |
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் |
||
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே |
||
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, |
||
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து |
||
ஓர் ஏர் உழவன் போல, |
||
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே, |
உரை | |
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார் |
179. குறிஞ்சி |
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, |
||
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; |
||
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; |
||
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த |
||
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் |
||
பேதை யானை சுவைத்த |
||
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. |
உரை | |
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன் |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |
253.பாலை |
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
||
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
||
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
||
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
||
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
||
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
||
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
||
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? |
உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |