1
விழா அறை காதை
|
||
|
||
|
[
விழாஅறைந்த பாட்டு
]
|
|
|
||
|
உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப் |
|
|
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய |
|
|
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத் |
|
|
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் |
|
5
|
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று |
|
|
||
|
மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள் |
|
|
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த |
|
|
நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென |
|
|
அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது |
|
10
|
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின், |
உரை |
|
||
|
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும், |
|
|
இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும், |
|
|
சமயக் கணக்கரும் தம்துறை போகிய |
|
|
அமயக் கணக்கரும் அகலார் ஆகிக |
|
15
|
கரந்துஉரு எய்திய கடவு ளாளரும், |
|
|
||
|
பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும |
|
|
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும் |
|
|
வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள் |
உரை |
|
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம், |
|
20
|
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் |
|
|
||
|
மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க |
|
|
இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் |
|
|
தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப் |
|
|
புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும் |
|
25
|
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் |
|
|
||
|
ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கென, |
உரை |
|
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் |
|
|
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி |
|
|
ஏற்றுஉரி போர்த்த இடியுறு முழக்கின் |
|
30
|
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை |
|
|
||
|
முரசுகடிப் பிடூஉம் முதுக்குடிப் பிறந்தோன் |
|
|
திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி |
|
|
வானமும் மாரி பொழிக மன்னவன் |
|
|
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக |
உரை |
35
|
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் |
|
|
||
ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள |
||
|
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் |
|
|
பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து |
|
|
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள் |
|
40
|
இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப் |
|
|
||
|
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது |
|
|
தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின், |
உரை |
|
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும் |
|
|
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் |
|
45
|
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் |
உரை |
|
||
|
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் |
|
|
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் |
உரை |
|
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து |
|
|
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின |
உரை |
50
|
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் |
|
|
||
|
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் |
உரை |
|
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும் |
|
|
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் |
உரை |
|
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் |
|
55
|
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக |
|
|
||
|
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை |
|
|
ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின் |
உரை |
|
தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் |
|
|
புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின் |
உரை |
60
|
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் |
|
|
||
|
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின் |
உரை |
|
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் |
உரை |
|
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் |
|
|
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும் |
|
65
|
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும் |
|
|
||
|
தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும் |
|
|
நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என் |
உரை |
|
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும் |
|
|
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப் |
|
70
|
பசியும் பிணியும் பகையும் நீங்கி |
|
|
||
|
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி |
|
|
அணிவிழா அறைந்தனன் அகநகர் மங்குஎன். |
உரை |
|
விழாவறை காதை முற்றிற்று. |
|
|
||
|
விழா
அறை காதை முற்றிற்று. |
|