|
17 உலக அறவி புக்க காதை |
|
|
||
|
[ மணிமேகலை காயசண்டிகை என்னும் |
|
|
விச்சாதரி வயிற்று யானைத்தீஅவித்து |
|
|
அம்பலம்புக்க பாட்டு ] |
|
|
||
|
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற |
|
|
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற்று அமலை |
|
|
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் |
|
|
திறத்து வழிப்படூஉம் செய்கை போல |
|
5
|
வாங்குகை வருந்த மன்உயிர்க்கு அளித்துத |
|
|
||
|
தான்தொலைவு இல்லாத் தகைமை நோக்கி, |
உரை |
|
யானைத் தீநோய் அகவயிற்று அடக்கிய |
|
|
காயசண் டிகைஎனும் காரிகை வணங்கி |
|
|
நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி |
|
10
|
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று |
|
|
||
|
குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் |
|
|
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு |
|
|
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப் |
|
|
பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால் |
|
15
|
அன்னை கேள்நீ ஆர்உயிர் மருத்துவி |
|
|
||
|
துன்னிய என்நோய் துடைப்பாய் என்றலும், |
உரை |
|
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் |
|
|
பிடித்ததுஅவள் கையில் பேணினள் பெய்தலும் |
|
|
வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் |
|
20
|
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்: |
உரை |
|
||
|
மாசுஇல் வால்ஒளி வடதிசைச் சேடிக் |
|
|
காசுஇல்காஞ் சனபுரக் கடிநகர் உள்ளேன் |
|
|
விஞ்சையன் தன்னொடுஎன் வெவ்வினை உருப்பத் |
|
|
தென்திசைப் பொதியில் காணிய வந்தேன் |
|
25
|
கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த |
|
|
||
|
இடுமணல் கானியாற்று இயைந்துஒருங்கு இருந்தேன் |
உரை |
|
புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை |
|
|
மரஉரி உடையன் விருச்சிகன் என்போன் |
|
|
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதுஓர் |
|
30
|
இருங்கனி நாவல் பழம்ஒன்று ஏந்தித் |
|
|
||
|
தேக்குஇலை வைத்துச் சேண்நாறு பரப்பில் |
|
|
பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் |
உரை |
|
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் |
|
|
காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் |
|
35
|
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் |
உரை |
|
||
|
கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் |
|
|
சீர்திகழ் நாவலில் திப்பிய |
|
|
ஈர்ஆறு ஆண்டில் ஒருகனி தருவது |
|
|
அக்கனி உண்டோர் ஆறுஈர் ஆண்டு |
|
40
|
மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் |
|
|
||
|
பன்னீ ராண்டில் ஒருநாள் அல்லது |
|
|
உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய் |
உரை |
|
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து |
|
|
தந்தித் தீயால் தனித்துயர் உழந்து |
|
45
|
முந்நால் ஆண்டில் முதிர்கனி நான்ஈங்கு |
|
|
||
|
உண்ணும் நாள்உன் உறுபசி களைகென |
|
|
அந்நாள் ஆங்குஅவன் இட்ட சாபம் |
|
|
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை |
உரை |
|
வாடுபசி உழந்து மாமுனி போயபின் |
|
50
|
பாடுஇமிழ் அருவிப் பயமலை ஒழிந்துஎன் |
|
|
||
|
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற |
|
|
இலகுஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி |
|
|
ஆர்அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால் |
|
|
காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை |
|
55
|
வான்ஊடு எழுகென மந்திரம் மறந்தேன் |
உரை |
|
||
|
ஊன்உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி |
|
|
வயிறுகாய் பெரும்பசி வருத்தும்என்றேற்குத் |
|
|
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன |
|
|
ஆங்குஅவன் கொணரவும் ஆற்றே னாக |
|
60
|
நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி |
|
|
||
|
ஆங்குஅவன் ஆங்குஎனக்கு அருளொடும் உரைப்போன் |
|
|
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் |
|
|
கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் |
|
|
ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி |
|
65
|
நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர் உண்டால் |
|
|
||
|
பலநாள் ஆயினும் நிலனொடு போகி |
|
|
அப்பதிப் புகுகென்று அவன்அருள் செய்ய |
|
|
இப்பதிப் புகுந்துஈங்கு யான்உறை கின்றேன் |
உரை |
|
இந்திர கோடணை விழவுஅணி வருநாள் |
|
70
|
வந்து தோன்றிஇம் மாநகர் மருங்கே |
|
|
||
|
என்உறு பெரும்பசி கண்டனன் இரங்கிப் |
|
|
பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன் கழியும் |
|
|
தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் |
|
|
மணிமே கலைஎன் வான்பதிப் படர்கேன் |
உரை |
75
|
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் |
|
|
||
|
சக்கர வாளக் கோட்டம்உண்டு ஆங்குஅதில் |
|
|
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் |
|
|
உலக அறவி ஒன்றுஉண்டு அதனிடை |
|
|
ஊர்ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர் |
|
80
|
ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் |
|
|
||
|
இடுவோர்த் தேர்ந்துஆங்கு இருப்போர் பலரால் |
|
|
வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென்று |
|
|
ஆங்குஅவள் போகிய பின்னர் -ஆயிழை |
உரை |
|
ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி |
|
85
|
வலமுறை மும்முறை வந்தனை செய்துஅவ் |
|
|
||
|
உலக அறவியின் ஒருதனி ஏறிப் |
|
|
பதியோர் தம்மொடு பலர்தொழுது ஏத்தும் |
|
|
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் |
|
|
கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய |
|
90
|
தம்துணைப் பாவையைத் தான்தொழுது ஏத்தி |
உரை |
|
||
|
வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக் |
|
|
கருவி மாமழை தோன்றியது என்னப |
|
|
பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு |
|
|
அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி |
|
95
|
ஆபுத் திரன்கை அமுத சுரபிஇஃது |
|
|
||
|
யாவரும் வருக ஏற்போர் தாம்என, |
|
|
ஊண்ஒலி அரவத்து ஒலிஎழுந் தன்றே |
|
|
யாணர்ப் பேர்ஊர் அம்பலம் மருங்குஎன். |
உரை |
|
||
|
||
|
உலக அறவி புக்க காதை முற்றிற்று. |
|
மேல் |