|
19 சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய |
|
|
காதை
|
|
|
[ மணிமேகலை காயசண்டிகை வடிவாய்ச் சிறைக்கோட்டம்புக்குச் சிறைவீடு செய்து சிறைக் கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய பாட்டு ] |
|
|
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி | |
|
மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற | |
|
ஏடுஅவிழ் தாரோய் எம்கோ மகள்முன | |
|
நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென | |
5
|
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் | |
|
||
|
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும், | உரை |
|
உதய குமரன் உள்ளம் கலங்கிப் | |
|
பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி | |
|
அங்குஅவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே | |
10
|
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் | |
|
||
|
பைஅரவு அல்குல் பலர்பசி களையக் | |
|
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் | |
|
முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச | |
|
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் | |
15
|
இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் | |
|
||
|
பின்அறி வாம்எனப் பெயர்வோன் தன்னை | உரை |
|
அகல்வாய் ஞாலம் ஆர்இருள் உண்ணப் | |
|
பகல்அரசு ஓட்டிப் பணைஎழுந்து ஆர்ப்ப | |
|
மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு | |
20
|
நீல யானை மேலோர் இன்றிக் | |
|
||
|
காமர் செங்கை நீட்டி வண்டுபடு | |
|
பூநாறு கடாஅம் செருக்கிக் கால்கிளர்ந்து | |
|
நிறைஅழி தோற்றமொடு தொடர முறைமையின் | உரை |
|
நகர நம்பியர் வளையோர் தம்முடன் | |
25
|
மகர வீணையின் கிளைநரம்பு வடித்த | |
|
||
|
இளிபுணர் இன்சீர் எஃகுஉளம் கிழிப்பப் | |
|
பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்திப் | |
|
பறாஅக் குருகின் உயிர்த்துஅவன் போயபின், | உரை |
|
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட | |
30
|
மறுஇல் செய்கை மணிமே கலைதான் | |
|
||
|
மாதவி மகளாய் மன்றம் திரிதரின் | |
|
காவலன் மகனோ கைவிட லீயான் | |
|
காய்பசி யாட்டி காயசண் டிகைஎன | |
|
ஊர்முழுது அறியும் உருவம் கொண்டே | |
35
|
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி | உரை |
|
||
|
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன்அவர் | |
|
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே | |
|
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராம்என | |
|
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த | |
40
|
அமுத சுரபியை அங்கையின் வாங்கிப் | |
|
||
|
பதிஅகம் திரிதரும் பைந்தொடி நங்கை | உரை |
|
அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை | |
|
ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் | |
|
விருப்பொடும் புகுந்து வெய்துஉயிர்த்துப் புலம்பி | |
45
|
ஆங்குப் பசிஉறும் ஆர்உயிர் மாக்களை | |
|
||
வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும், | உரை | |
|
ஊட்டிய பாத்திரம் ஒன்றுஎன வியந்து | |
|
கோட்டம் காவலர் கோமகன் தனக்குஇப் | |
|
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் | |
50
|
யாப்புடைத் தாக இசைத்தும்என்று ஏகி, | உரை |
|
||
|
நெடியோன் குறள்உரு வாகி நிமிர்ந்துதன | |
|
அடியின் படியை அடக்கிய அந்நாள் | |
|
நீரின் பெய்த மூரி வார்சிலை | |
|
மாவலி மருமான் சீர்கெழு திருமகள் | |
55
|
சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு | |
|
||
|
போதுஅவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் | உரை |
|
கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் | |
|
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய | |
|
வரிக்குயில் பாட மாமயில் ஆடும் | |
60
|
விரைப்பூம் பந்தர் கண்டுஉளம் சிறந்தும், | உரை |
|
||
|
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு | |
|
மடமயில் பேடையும் தோகையும் கூடி | |
|
இருசிறை விரித்துஆங்கு எழுந்துடன் கொட்பன | |
|
ஒருசிறைக் கண்டுஆங்கு உள்மகிழ்வு எய்தி | |
65
|
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் | |
|
||
|
ஆடிய குரவைஇஃது ஆம்என நோக்கியும், | உரை |
|
கோங்குஅலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் | |
|
பாங்குஉற இருந்த பல்பொறி மஞ்ஞையைச | |
|
செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் | |
70
|
பைங்கிளி ஊட்டும்ஓர் பாவையாம் என்றும், | உரை |
|
||
|
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த | |
|
பிணவுக்குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண் | |
|
மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல் | |
|
கடுவன் ஊக் குவது கண்டுநகை எய்தியும், | உரை |
75
|
பாசிலை செறிந்த பசுங்கால் கழையொடு | |
|
||
|
வால்வீச் செறிந்த மராஅம் கண்டு | |
|
நெடியோன் முன்னொடு நின்றன னாம்எனத் | |
|
தொடிசேர் செங்கையில் தொழுதுநின்று ஏத்தியும | உரை |
|
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர் | |
80
|
நாடகக் காப்பிய நல்நூல் நுனிப்போர் | |
|
||
|
பண்ணியாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் | |
|
தண்ணுமைக் கருவிக் கண்எறி தெரிவோர் | |
|
குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர் | |
|
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் | |
85
|
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர் | |
|
||
|
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் | |
|
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் | |
|
அஞ்செங் கழுநீர் ஆய்இதழ் பிணிப்போர் | |
|
நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் | |
90
|
பொன்னின் ஆடியின் பொருந்துபு நிற்போர் | |
|
||
|
ஆங்குஅவர் தம்மோடு அகல்இரு வானத்து | |
|
வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து, | உரை |
|
குருந்தும் தளவும் திருந்துமலர்ச் செருந்தியும் | |
|
முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் | |
95
|
பொருந்துபு நின்று திருந்துநகை செய்து | |
|
||
|
குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் | |
|
பிறழ்ந்துபாய் மானும் இறும்புஅகலா வெறியும் | |
|
வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன் | |
|
செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று | உரை |
100
|
மன்னவன் தானும் மலர்க்கணை மைந்தனும் | |
|
||
|
இன்இள வேனிலும் இளங்கால் செல்வனும் | |
|
எந்திரக் கிணறும் இடுங்கல் குன்றமும் | |
|
வந்துவீழ் அருவியும் மலர்ப்பூம் பந்தரும் | |
|
பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும் | |
105
|
ஒளித்துறை இடங்களும் பளிக்குஅறைப் பள்ளியும் | |
|
||
|
யாங்கணும் திரிந்து தாழ்ந்துவிளை யாடி, | உரை |
|
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் | |
|
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் | |
|
தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் | |
110
|
கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினைப் | |
|
||
|
பவளத் திரள்கால் பன்மணிப் போதிகைத் | |
|
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த | |
|
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் | |
|
தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின் | |
115
|
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து | |
|
||
|
இந்திர திருவன் சென்றுஇனிது ஏறலும், | உரை |
|
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் | |
|
சேய்நிலத்து அன்றியும் செவ்விதின் வணங்கி | |
|
எஞ்சா மண்நசைஇ இகல்உளம் துரப்ப | |
120
|
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி | |
|
||
|
முறம்செவி யானையும் தேரும் மாவும | |
|
மறம்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த | |
|
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர | |
|
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேல் தடக்கை | |
125
|
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் | |
|
||
|
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை | |
|
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி | |
|
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி | |
|
வாழி எம்கோ மன்னவர் பெருந்தகை | |
130
|
கேள்இது மன்னோ கெடுகநின் பகைஞர் | உரை |
|
||
|
யானைத் தீநோய்க்கு அயர்ந்துமெய் வாடிஇம் | |
|
மாநகர்த் திரியும்ஓர் வம்ப மாதர் | |
|
அருஞ்சிறைக் கோட்டத்து அகவயின் புகுந்து | |
|
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி | |
135
|
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு | |
|
||
|
மொய்கொள் மாக்கள் மொசிக்கஊண் சுரந்தனள் | |
|
ஊழிதோறு ஊழி உலகம் காத்து | |
|
வாழி எம்கோ மன்னவ என்றலும், | உரை |
|
வருக வருக மடக்கொடி தான்என்று | |
140
|
அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் | |
|
||
|
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று | |
|
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியஎனத் | |
|
தாங்குஅருந் தன்மைத் தவத்தோய் நீயார் | |
|
யாங்கா கியதுஇவ் ஏந்திய கடிஞைஎன்று | |
145
|
அரசன் கூறலும், ஆயிழை யுரைக்கும் | உரை |
|
||
|
விரைத்தார் வேந்தே நீநீடு வாழி | |
|
விஞ்சை மகள்யான் விழவுஅணி மூதூர | |
|
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை | |
|
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக | |
150
|
தீதுஇன் றாக கோமகற்கு ஈங்குஈது | |
|
||
|
ஐயக் கடிஞை அம்பலம் மருங்குஓர் | |
|
தெய்வம் தந்தது திப்பிய மாயது | |
|
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது | |
|
ஊன்உடை மாக்கட்கு உயிர்மருந்து இதுஎன, | உரை |
155
|
யான்செயற் பாலதுஎன் இளங்கொடிக்கு என்று | |
|
||
|
வேந்தன் கூற மெல்இயல் உரைக்கும் | |
|
சிறையோர் கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து | |
|
அறவோர்க்கு ஆக்கும் அதுவா ழியர்என, | உரை |
|
அருஞ்சிறை விட்டுஆங்கு ஆயிழை உரைத்த | |
160
|
பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்தக் | |
|
||
|
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் | |
|
அறவோர்க்கு ஆக்கினன் அரசுஆள் வேந்துஎன். | உரை |
|
||
|
சிறைக்கோட்டம் அறக்கோட்டம்
ஆக்கிய காதை |
|
மேல் |