|
23 சிறைவிடு காதை |
|
|
||
|
[ மணிமேகலை சிறைவீடுசெய்த இராசமா தேவி |
|
|
குறைகொண்டிரப்பச் சீலம்கொடுத்த பாட்டு ] |
|
|
||
|
மன்னவன் அருளால் வாசந் தவைஎனும் | |
|
நல்நெடுங் கூந்தல் நரைமூ தாட்டி | |
|
அரசர்க்கு ஆயினும் குமரற்கு ஆயினும் | |
|
திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் | |
5
|
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் | |
|
||
|
பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் | |
|
இலங்குஅரி நெடுங்கண் இராசமா தேவி | |
|
கலங்குஅஞர் ஒழியக் கடிதுசென்று எய்தி | |
|
அழுதுஅடி வீழாது ஆயிழை தன்னைத் | |
10
|
தொழுதுமுன் நின்று தோன்ற வாழ்த்திக் | உரை |
|
||
|
கொற்றம் கொண்டு குடிபுறம் காத்தும் | |
|
செற்ற தெவ்வர் தேஎம்தமது ஆக்கியும் | |
|
தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து | |
|
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென | |
15
|
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு | |
|
||
|
நாப்புடை பெயராது நாணுத்தகவு உடைத்தே | உரை |
|
தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று | |
|
என்எனப் படுமோ நின்மகன் மடிந்தது! | |
|
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன் | |
20
|
துன்பம் கொள்ளேல் என்றுஅவள் போயபின், | உரை |
|
||
|
கையாற்று உள்ளம் கரந்துஅகத்து அடக்கிப் | |
|
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டுபுறம் மறைத்து | |
|
வஞ்சம் செய்குவன் மணிமே கலையைஎன்று | |
|
அம்சில் ஓதி அரசனுக்கு ஒருநாள் | |
25
|
பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து | |
|
||
|
அறிவு திரிந்தோன் அரசுஇயல் தான்இலன் | |
|
கரும்புஉடைத் தடக்கைக் காமன் கையற | |
|
அரும்பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும் | |
|
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச் | |
30
|
சிறைதக் கன்று செங்கோல் வேந்துஎனச் | உரை |
|
||
|
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் | |
|
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது | |
|
அறிந்தனை ஆயின்இவ் ஆயிழை தன்னைச் | |
|
செறிந்த சிறைநோய் தீர்க்கென்று இறைசொல, | உரை |
35
|
என்னோடு இருப்பினும் இருக்கஇவ் இளங்கொடி | |
|
||
|
தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்என்று | |
|
அங்குஅவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு | |
|
கொங்குஅவிழ் குழலாள் கோயிலுள் புக்குஆங்கு, | உரை |
|
அறிவு திரிந்துஇவ் அகல்நகர் எல்லாம் | |
40
|
எறிதரு கோலம்யான் செய்குவல் என்றே | |
|
||
|
மயல்பகை ஊட்ட மறுபிறப்பு உணர்ந்தாள் | |
|
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக, | உரை |
|
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் | |
|
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன் | |
45
|
இணைவளர் இளமுலை ஏந்துஎழில் ஆகத்துப் | |
|
||
புணர்குறி செய்து பொருந்தினள் என்னும் | ||
|
பான்மைக் கட்டுரை பலர்க்குஉரை என்றே | |
|
காணம் பலவும் கைநிறை கொடுப்ப, | உரை |
|
ஆங்குஅவன் சென்றுஅவ் ஆயிழை இருந்த | |
50
|
பாங்கில் ஒருசிறைப் பாடுசென்று அணைதலும், | |
|
||
|
தேவி வஞ்சம் இதுஎனத் தெளிந்து | |
|
நாஇயல் மந்திரம் நடுங்காது ஓதி | |
|
ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்பக் | |
|
காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி | |
55
|
அரசர் உரிமையில் ஆடவர் அணுகார் | |
|
||
|
நிரயக் கொடுமகள் நினைப்புஅறி யேன்என்று | |
|
அகநகர் கைவிட்டு ஆங்குஅவன் போயபின், | உரை |
|
மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று | |
|
உய்யா நோயின் ஊண்ஒழிந் தனள்எனப் | |
60
|
பொய்ந்நோய் காட்டிப் புழுக்குஅறை அடைப்ப | |
|
||
|
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அந்த | |
|
வாள்நுதல் மேனி வருந்தாது இருப்ப, | |
|
ஐஎன விம்மி ஆயிழை நடுங்கிச் | |
|
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் | |
65
|
என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது | |
|
||
|
பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ, | உரை |
|
நீல பதிதன் வயிற்றில் தோன்றிய | |
|
ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை | |
|
அழல்கண் நாகம் ஆர்உயிர் உண்ண | |
70
|
விழித்தல் ஆற்றேன் என்உயிர் சுடுநாள் | |
|
||
|
யாங்குஇருந்து அமுதனை இளங்கோன் தனக்குப் | |
|
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை | |
|
உடற்குஅழு தனையோ உயிர்க்குஅழு தனையோ | |
|
உடற்குஅழு தனையேல் உன்மகன் தன்னை | |
75
|
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே | |
|
||
|
உயிர்க்குஅழு தனையேல் உயிர்புகும் புக்கில் | |
|
செயப்பாட்டு வினையால் தெரிந்துஉணர்வு அரியது | |
|
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி | |
|
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் | உரை |
80
|
மற்றுஉன் மகனை மாபெருந் தேவி | |
|
||
|
செற்ற கள்வன் செய்தது கேளாய்: | |
|
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை | |
|
உடல்துணி செய்துஆங்கு உருத்துஎழும் வல்வினை | |
|
நஞ்சுவிழி அரவின் நல்உயிர் வாங்கி | |
85
|
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே! | உரை |
|
||
|
யாங்குஅறிந் தனையோ ஈங்குஇது நீஎனில் | |
|
பூங்கொடி நல்லாய் புகுந்தது இதுஎன | |
|
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத் | |
|
தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா | |
90
|
உற்றதை எல்லாம் ஒழிவுஇன்று உரைத்து, | உரை |
|
||
|
மற்றும் உரைசெயும் மணிமே கலைதான | |
|
மயல்பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன் | |
|
அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் | |
|
கல்லாக் கயவன் கார்இருள் தான்வர | |
95
|
நல்லாய் ஆண்உரு நான்கொண்டு இருந்தேன், | |
|
||
|
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ | |
|
மாண்இழை செய்த வஞ்சம் பிழைத்தது. | உரை |
|
அந்தரம் சேறலும் அயல்உருக் கோடலும் | |
|
சிந்தையின் கொண்டிலேன் சென்ற பிறவியில் | |
100
|
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து | |
|
||
|
தீதுஉறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் | உரை |
|
தையால் உன்தன் தடுமாற்று அவலத்து | |
|
எய்யா மையல்தீர்ந்து இன்உரை கேளாய்: | உரை |
|
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல்நாட்டுக் | |
105
|
காருக மடந்தை கணவனும் கைவிட | |
|
||
|
ஈன்ற குழவியொடு தான்வேறு ஆகி | |
|
மான்றுஓர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப் | |
|
புதல்வன் தன்னைஓர் புரிநூல் மார்பன் | |
|
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க | |
110
|
ஆங்குஅப் புதல்வன் அவள்திறம் அறியான் | |
|
||
|
தான்புணர்ந்து அறிந்துபின் தன்உயிர் நீத்ததும், | உரை |
|
நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் | |
|
சூல்முதிர் மடமான் வயிறுகிழித்து ஓடக் | |
|
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப | |
115
|
மான்மறி விழுந்தது கண்டு மனம்மயங்கிப் | |
|
||
|
பயிர்க்குரல் கேட்டுஅதன் பான்மையன் ஆகி | |
|
உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்கண்டு | |
|
ஓட்டி எய்தோன் ஓர்உயிர் துறந்ததும் | |
|
கேட்டும் அறிதியோ வாள்தடங் கண்ணி! | உரை |
120
|
கடாஅ யானைமுன் கள்கா முற்றோர் | |
|
||
|
விடாஅது சென்றுஅதன் வெண்கோட்டு வீழ்வது | |
|
உண்ட கள்ளின் உறுசெருக்கு ஆவது | |
|
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்! | உரை |
|
பொய்யாற்று ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர் | |
125
|
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ? | உரை |
|
||
|
களவுஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர் | |
|
இளவேய்த் தோளாய்க்கு இதுஎன வேண்டா | உரை |
|
மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை | |
|
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் | உரை |
130
|
கற்ற கல்வி அன்றால் காரிகை | |
|
||
|
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் | |
|
மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர் | |
|
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் | |
|
திருந்துஏர் எல்வளை செல்உலகு அறிந்தோர் | |
135
|
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் | |
|
||
|
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர் | |
|
மன்பதைக்கு எல்லாம் அன்புஒழி யார்என | |
|
ஞான நல்நீர் நன்கனம் தெளித்துத் | |
|
தேன்ஆர் ஓதி செவிமுதல் வார்த்து | |
140
|
மகன்துயர் நெருப்பா மனம்விறகு ஆக | |
|
||
|
அகம்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப, | உரை |
|
தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து | |
|
மாறுகொண்டு ஓரா மனத்தினன் ஆகி | |
|
ஆங்குஅவள் தொழுதலும், ஆயிழை பொறாஅள் | |
145
|
தான்தொழுது ஏத்தித் தகுதி செய்திலை | |
|
||
|
காதலன் பயந்தோய் அன்றியும் காவலன் | |
|
மாபெருந் தேவிஎன்று எதிர்வணங் கினள்என். | உரை |
|
||
|
சிறைவிடு காதை முற்றிற்று.
|
|
மேல் |