சிதம்பரத்தில் தங்கி இருக்கும் காலத்தில்
நீதிநெறி விளக்கம் என்னும் நூலும் இவரால் செய்யப்பெற்றது. மாணவர்களுக்கு
நீதிநூலைக் கற்பிக்கவேண்டும் எனக் கருதுவோர் நீதிநெறி விளக்கத்தையே
முதன்மையான நூலாகக் கருதிக் கற்பித்தனர் என்பது அனைவரும் உள்ளம் கொள்ளத்தக்கதாகும்.
|
சிதம்பரத்தினின்றும் திரும்பிய குமரகுருபரர்
தம் ஞானாசிரியராகிய ஸ்ரீ மாசிலாமணி தேசிகரிடத்தில் கல்லாடை பெற்று
குமரமுருபரமுனிவர் என வழங்கப்பெறுவாராயினர். அவருடைய ஞான தேசிகர்பால்
அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை விளக்குமுகமாகப் பண்டார மும்மணிக் கோவை
என்னும் நூல் திகழ்கின்றது.
|
தருமபுரத்தில் சிலகாலம் தங்கியிருந்த
பின் இவர் காசிக்குச் சென்றார். தம் அறிவாற்றலாலும், தவச் சிறப்பாலும்
டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். காசியில் தங்கியிருந்த
காலை ஹிந்துஸ்தானிய மொழியை விரைவில் கற்றுத் தேறினார். அம்மொழியில்
தமக்கு விரைந்த புலமை வேண்டும் என்னும் |