|
|
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?- |
|
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம் |
|
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத் |
|
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய |
|
ஏதிலாளர் இவண் வரின், ''போதின் |
|
பொம்மல் ஓதியும் புனையல்; |
|
எம்மும் தொடாஅல்'' என்குவெம்மன்னே. |
உரை |
|
பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |
|
''ஈங்கே வருவர், இனையல், அவர்'' என, |
|
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
|
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
|
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
|
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
|
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. |
உரை |
|
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
|
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன |
|
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, |
|
தட்டைப் பறையின், கறங்கும் நாடன் |
|
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் |
|
மணந்தனன்மன் எம் தோளே; |
|
இன்றும், முல்லை முகை நாறும்மே. |
உரை |
|
தோழி கடிநகர் புக்கு, ''நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார் |
|
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
|
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
|
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
|
ஏதில கலந்த இரண்டற்கு என் |
|
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? |
உரை |
|
பருவ வரவின்கண், ''ஆற்றாளாம்'', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |
|
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் |
|
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை, |
|
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்? |
|
''இன்னாது, இரங்கும்'' என்னார் அன்னோ- |
|
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச் |
|
செய்வுறு பாவை அன்ன என் |
|
மெய் பிறிதாகுதல் அறியாதோரே! |
உரை |
|
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன். |
|
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, |
|
''தேம் பூங் கட்டி'' என்றனிர்; இனியே, |
|
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் |
|
தைஇத் திங்கள் தண்ணிய தரினும், |
|
''வெய்ய உவர்க்கும்'' என்றனிர்- |
|
ஐய!-அற்றால் அன்பின் பாலே. |
உரை |
|
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன். |
|
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக |
|
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை |
|
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய |
|
கூதிர் உருவின் கூற்றம் |
|
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே? |
உரை |
|
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
|
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
|
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
|
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
|
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
|
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
|
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
|
ஆரம் நாறும் மார்பினை, |
|
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை |
|
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
|
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று |
|
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க் |
|
கை வள் ஓரி கானம் தீண்டி |
|
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் |
|
மை ஈர் ஓதி மாஅயோள்வயின், |
|
இன்றை அன்ன நட்பின் இந் நோய் |
|
இறு முறை என ஒன்று இன்றி, |
|
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே. |
உரை |
|
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர் |
|
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் |
|
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து, |
|
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!- |
|
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே- |
|
கால மாரி மாலை மா மலை |
|
இன் இசை உருமினம் முரலும் |
|
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே. |
உரை |
|
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, ''பருவம் அன்று; வம்பு''என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார். |
|