|
|
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் |
|
கால மாரி பெய்தென, அதன் எதிர் |
|
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; |
|
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! |
|
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், |
|
புது நீர் கொளீஇய, உகுத்தரும் |
|
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. |
உரை |
|
பிரிவிடைத் தோழி. ''பருவம் அன்று; பட்டது வம்பு'' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன். |
|
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த |
|
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் |
|
வருவதோர் காலை, இன் முகம் திரியாது, |
|
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி, |
|
''மடவைமன்ற நீ'' எனக் கடவுபு |
|
துனியல் வாழி-தோழி!-சான்றோர் |
|
புகழும் முன்னர் நாணுப; |
|
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே? |
உரை |
|
தலைமகன் வரவறிந்த தோழி, ''அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன் |
|
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
|
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
|
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
|
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
|
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
|
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
|
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
உரை |
|
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |
|
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, |
|
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் |
|
தலை அலர் வந்தன; வாரா-தோழி!- |
|
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; |
|
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- |
|
''செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் |
|
எய்தினரால்'' என, வரூஉம் தூதே. |
உரை |
|
பருவம் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான் |
|
பொத்து இல் காழ அத்த யாஅத்துப் |
|
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி, |
|
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச் |
|
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும் |
|
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!- |
|
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் |
|
காமர் பொருட்பிணிப் போகிய |
|
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. |
உரை |
|
''இடைநின்று மீள்வர்'' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன் |
|
''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
|
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
|
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
|
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
|
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?'' எனச் |
|
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
|
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
|
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. |
உரை |
|
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |
|
வேரும் முதலும் கோடும் ஒராங்குத் |
|
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் |
|
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் |
|
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்; |
|
அகலினும் அகலாதாகி |
|
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே. |
உரை |
|
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன் |
|
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
|
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
|
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
|
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
|
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
|
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
|
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
|
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. |
உரை |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |
|
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
|
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
|
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
|
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
|
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
|
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
|
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
|
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. |
உரை |
|
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, ''யானே பரி கரிப்பல்''என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |
|
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
|
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
|
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
|
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
|
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
|
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
|
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
|
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை |
|
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
|