|
|
பல் வீ படரிய பசு நனை குரவம் |
|
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் |
|
சினை இனிது ஆகிய காலையும், காதலர் |
|
பேணார் ஆயினும், ''பெரியோர் நெஞ்சத்துக் |
|
கண்ணிய ஆண்மை கடவது அன்று'' என, |
|
வலியா நெஞ்சம் வலிப்ப, |
|
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே. |
உரை |
|
''பருவ வரவின்கண் வேறுபடும்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன் |
|
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
|
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
|
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
|
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
|
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
|
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
|
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? |
உரை |
|
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |
|
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
|
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
|
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
|
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
|
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
|
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
|
உயர் வரை நாடனொடு பெயருமாறே. |
உரை |
|
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |
|
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
|
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
|
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
|
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
|
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, |
|
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
|
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
|
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. |
உரை |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |
|
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் |
|
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் |
|
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய |
|
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- |
|
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி |
|
இழுமென ஒலிக்கும் ஆங்கண் |
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? |
உரை |
|
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி ''இரா வா'' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி |
|
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
|
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
|
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
|
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
|
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
|
காலை வந்து, மாலைப் பொழுதில் |
|
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
|
சொல்லவும் ஆகாது அஃகியோனே. |
உரை |
|
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
|
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
|
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
|
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
|
கான நீள் இடை, தானும் நம்மொடு |
|
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
|
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. |
உரை |
|
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |
|
தாமே செல்பஆயின், கானத்துப் |
|
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
|
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
|
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
|
பூண் அக வன் முலை நனைத்தலும் |
|
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? |
உரை |
|
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |
|
''அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, |
|
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் |
|
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் |
|
கொள்வாம்'' என்றி-தோழி!-கொள்வாம்; |
|
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய |
|
கொடுத்து ''அவை தா'' எனக் கூறலின், |
|
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? |
உரை |
|
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன். |
|
அம்ம வாழி-தோழி!-முன் நின்று, |
|
''பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்'' எனச் |
|
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ- |
|
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை |
|
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, |
|
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் |
|
மலையுடைக் கானம் நீந்தி, |
|
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே? |
உரை |
|
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார். |
|