|
10
மந்திரம் கொடுத்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலாதெய்வம் வந்துதோன்றி
|
|
|
மந்திரம்
கொடுத்த பாட்டு ]
|
|
|
|
|
|
அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த
|
|
|
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐதுஎன
|
|
|
விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
|
|
|
பொருஅறு பூங்கொடி பூமியில் பொலிந்தென
|
|
5
|
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்
|
உரை
|
|
|
|
|
முந்தைப் பிறப்புஎய்தி நின்றோள் கேட்ப,
|
|
|
உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப்
|
|
|
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்துஅறிவு
இழந்த
|
|
|
வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச்
|
|
10
|
சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர்
|
|
|
|
|
|
இளவள ஞாயிறு தோன்றியது என்ன
|
|
|
நீயோ தோன்றினை நின்அடி பணிந்தேன்
|
உரை
|
|
நீயே ஆகிநிற்கு அமைந்தஇவ் ஆசனம்
|
|
|
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
|
|
15
|
பூமிசை ஏற்றினேன் புலம்புஅறுக என்றே
|
|
|
|
|
|
வலம்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்,
|
உரை
|
|
பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப்
பொருந்தி
|
|
|
உன்திரு அருளால் என்பிறப்பு உணர்ந்தேன்
|
|
|
என்பெருங் கணவன் யாங்குஉளன் என்றலும்,
|
உரை
|
20
|
இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
|
|
|
|
|
|
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
|
|
|
இடங்கழி காமமொடு அடங்கா னாய்அவன்
|
|
|
மடந்தை மெல்இயல் மலர்அடி வணங்குழிச்
|
|
|
சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்
|
|
25
|
தெருமரல் ஒழித்துஆங்கு இரத்தின தீவத்துத்
|
|
|
|
|
|
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
|
|
|
வெங்கதிர் அமயத்து வியன்பொழில் அகவயின்
|
|
|
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
|
உரை
|
|
மெல்இயல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை
|
|
30
|
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
|
|
|
|
|
|
இராகுலன் வந்தோன் யார்என வெகுளலும்
|
உரை
|
|
விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா
|
|
|
வான்ஊடு இழிந்தோன் மலர்அடி வணங்காது
|
|
|
நாநல் கூர்ந்தனை என்றுஅவன் தன்னொடு
|
|
35
|
பகைஅறு பாத்தியன் பாதம் பணிந்துஆங்கு,
|
|
|
|
|
|
அமர கேள்நின் தமர்அலம் ஆயினும்
|
|
|
அம்தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
|
|
|
உண்டி யாம்உன் குறிப்பினம் என்றலும்
|
உரை
|
|
எம்அனை உண்கேன் ஈங்குக் கொணர்கென
| |
40
|
அந்நாள் அவன்உண் டருளிய அவ்வறம்
|
|
|
|
|
|
நின்ஆங்கு ஒழியாது நின்பிறப்பு அறுத்திடும்.
|
உரை
|
|
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
|
|
|
உதய குமரன் அவன்உன் இராகுலன்
|
|
|
ஆங்குஅவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
|
|
45
|
நீங்காத் தன்மை நினக்கும்உண்டு ஆகலின்
|
|
|
|
|
|
கந்த சாலியின் கழிபெரு வித்துஓர்
|
|
|
வெந்துஉகு வெண்களர் வீழ்வது போன்ம்என
|
|
|
அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னைஓர்
|
|
|
திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன்.
|
உரை
|
50
|
இன்னும் கேளாய் இலக்குமி! நீநின்
|
|
|
|
|
|
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
|
|
|
ஆங்குஅவர் தம்மை அங்கநாட்டு அகவயின்
|
|
|
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
|
|
|
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
|
|
55
|
அவருடன் ஆங்குஅவன் அகல்மலை ஆடிக்
|
|
|
|
|
|
கங்கைப் பேர்யாற்று அடைகரை இருந்துழி
|
உரை
|
|
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
|
|
|
அறவணன் ஆங்குஅவன் பால்சென் றோனை
|
|
|
ஈங்கு வந்தீர் யார்என்று எழுந்துஅவன்
|
|
60
|
பாங்குஉளி மாதவன் பாதம் பணிதலும்
|
உரை
|
|
|
|
|
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
|
|
|
மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி
|
|
|
விலங்கும் தம்முள் வெரூஉம்பகை நீக்கி
|
|
|
உடங்குஉயிர் வாழ்கஎன்று உள்ளம் கசிந்துஉகத்
|
|
65
|
தொன்றுகா லத்து நின்றுஅறம் உரைத்த
|
|
|
|
|
|
குன்றம் மருங்கில் குற்றம் கெடுக்கும்
|
|
|
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்குஇது
|
|
|
பாதபங் கயமலை எனும்பெயர்த்து ஆயது
|
|
|
தொழுதுவலம் கொள்ள வந்தேன் ஈங்குஇப்
|
|
70
|
பழுதுஇல் காட்சியீர் நீயிரும் தொழும்என
|
உரை
|
|
|
|
|
அன்றுஅவன் உரைத்த அவ்வுரை பிழையாது
|
|
|
சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்
|
|
|
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
|
|
|
கோதைஅம் சாயல் நின்னொடு கூடினர்.
|
உரை
|
75
|
அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை
|
|
|
|
|
|
பிறஅறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
|
|
|
பல்வேறு சமயப் படிற்றுஉரை எல்லாம்
|
|
|
அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள்
|
|
|
இளையள் வளையோள் என்றுஉனக்கு யாவரும்
|
|
80
|
விளைபொருள் உரையார் வேற்றுஉரு எய்தவும்,
|
|
|
|
|
|
அந்தரம் திரியவும் ஆக்கும்இவ் அருந்திறல்
|
|
|
மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி
|
உரை
|
|
மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள்
|
|
|
பொதுஅறிவு இகழ்ந்து புலம்உறு மாதவன்
|
|
85
|
திருஅறம் எய்துதல் சித்தம்என்று உணர்நீ
|
|
|
|
|
|
மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
|
|
|
நின்பதிப் புகுவாய் என்றுஎழுந்து ஓங்கி,
|
|
|
மறந்ததும் உண்டுஎன மறித்துஆங்கு இழிந்து
|
|
|
சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்
|
|
90
|
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
|
|
|
|
|
|
இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும்என்று
|
|
|
ஆங்குஅது கொடுத்துஆங்கு அந்தரம் எழுந்து
|
|
|
நீங்கியது ஆங்கு நெடுந்தெய்வம் தான்என்.
|
உரை
|
|
|
|
|
மந்திரம் கொடுத்த
காதை முற்றிற்று.
|
|
|