|
17 உலக அறவி
புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை காயசண்டிகை என்னும்
|
|
|
விச்சாதரி வயிற்று
யானைத்தீஅவித்து
|
|
|
அம்பலம்புக்க
பாட்டு
]
|
|
|
|
|
|
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
|
|
|
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற்று அமலை
|
|
|
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
|
|
|
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
|
|
5
|
வாங்குகை வருந்த மன்உயிர்க்கு
அளித்துத
|
|
|
|
|
|
தான்தொலைவு இல்லாத் தகைமை
நோக்கி,
|
உரை
|
|
யானைத் தீநோய் அகவயிற்று அடக்கிய
|
|
|
காயசண் டிகைஎனும் காரிகை வணங்கி
|
|
|
நெடியோன் மயங்கி நிலமிசைத்
தோன்றி
|
|
10
|
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
|
|
|
|
|
|
குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை
எல்லாம்
|
|
|
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு
|
|
|
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
|
|
|
பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்
|
|
15
|
அன்னை கேள்நீ ஆர்உயிர் மருத்துவி
|
|
|
|
|
|
துன்னிய என்நோய் துடைப்பாய்
என்றலும்,
|
உரை
|
|
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
|
|
|
பிடித்ததுஅவள் கையில் பேணினள்
பெய்தலும்
|
|
|
வயிறுகாய் பெரும்பசி நீங்கி
மற்றவள்
|
|
20
|
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்:
|
உரை
|
|
|
|
|
மாசுஇல் வால்ஒளி வடதிசைச் சேடிக்
|
|
|
காசுஇல்காஞ் சனபுரக் கடிநகர்
உள்ளேன்
|
|
|
விஞ்சையன் தன்னொடுஎன் வெவ்வினை
உருப்பத்
|
|
|
தென்திசைப் பொதியில் காணிய
வந்தேன்
|
|
25
|
கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த
|
|
|
|
|
|
இடுமணல் கானியாற்று இயைந்துஒருங்கு
இருந்தேன்
|
உரை
|
|
புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை
|
|
|
மரஉரி உடையன் விருச்சிகன் என்போன்
|
|
|
பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி
அனையதுஓர்
|
|
30
|
இருங்கனி நாவல் பழம்ஒன்று ஏந்தித்
|
|
|
|
|
|
தேக்குஇலை வைத்துச் சேண்நாறு
பரப்பில்
|
|
|
பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
|
உரை
|
|
தீவினை உருத்தலின் செருக்கொடு
சென்றேன்
|
|
|
காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன்
|
|
35
|
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
|
உரை
|
|
|
|
|
கண்டனன் என்னைக் கருங்கனிச்
சிதைவுடன்
|
|
|
சீர்திகழ் நாவலில் திப்பிய
|
|
|
ஈர்ஆறு ஆண்டில் ஒருகனி தருவது
|
|
|
அக்கனி உண்டோர் ஆறுஈர் ஆண்டு
|
|
40
|
மக்கள் யாக்கையின் வரும்பசி
நீங்குவர்
|
|
|
|
|
|
பன்னீ ராண்டில் ஒருநாள் அல்லது
|
|
|
உண்ணா நோன்பினேன் உண்கனி
சிதைத்தாய்
|
உரை
|
|
அந்தரம் செல்லும் மந்திரம்
இழந்து
|
|
|
தந்தித் தீயால் தனித்துயர்
உழந்து
|
|
45
|
முந்நால் ஆண்டில் முதிர்கனி நான்ஈங்கு
|
|
|
|
|
|
உண்ணும் நாள்உன் உறுபசி களைகென
|
|
|
அந்நாள் ஆங்குஅவன் இட்ட சாபம்
|
|
|
இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை
|
உரை
|
|
வாடுபசி உழந்து மாமுனி போயபின்
|
|
50
|
பாடுஇமிழ் அருவிப் பயமலை ஒழிந்துஎன்
|
|
|
|
|
|
அலவலைச் செய்திக்கு அஞ்சினன்
அகன்ற
|
|
|
இலகுஒளி விஞ்சையன் விழுமமோடு
எய்தி
|
|
|
ஆர்அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால்
|
|
|
காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை
|
|
55
|
வான்ஊடு எழுகென மந்திரம் மறந்தேன்
|
உரை
|
|
|
|
|
ஊன்உயிர் நீங்கும் உருப்பொடு
தோன்றி
|
|
|
வயிறுகாய் பெரும்பசி வருத்தும்என்றேற்குத்
|
|
|
தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன
|
|
|
ஆங்குஅவன் கொணரவும் ஆற்றே னாக
|
|
60
|
நீங்கல் ஆற்றான் நெடுந்துயர்
எய்தி
|
|
|
|
|
|
ஆங்குஅவன் ஆங்குஎனக்கு அருளொடும்
உரைப்போன்
|
|
|
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
|
|
|
கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர்
|
|
|
ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி
|
|
65
|
நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர்
உண்டால்
|
|
|
|
|
|
பலநாள் ஆயினும் நிலனொடு போகி
|
|
|
அப்பதிப் புகுகென்று அவன்அருள்
செய்ய
|
|
|
இப்பதிப் புகுந்துஈங்கு யான்உறை
கின்றேன்
|
உரை
|
|
இந்திர கோடணை விழவுஅணி வருநாள்
|
|
70
|
வந்து தோன்றிஇம் மாநகர் மருங்கே
|
|
|
|
|
|
என்உறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்
|
|
|
பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன்
கழியும்
|
|
|
தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை
வணங்கினேன்
|
|
|
மணிமே கலைஎன் வான்பதிப் படர்கேன்
|
உரை
|
75
|
துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர்
|
|
|
|
|
|
சக்கர வாளக் கோட்டம்உண்டு ஆங்குஅதில்
|
|
|
பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்
|
|
|
உலக அறவி ஒன்றுஉண்டு அதனிடை
|
|
|
ஊர்ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்
|
|
80
|
ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்
|
|
|
|
|
|
இடுவோர்த் தேர்ந்துஆங்கு இருப்போர்
பலரால்
|
|
|
வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென்று
|
|
|
ஆங்குஅவள் போகிய பின்னர் -ஆயிழை
|
உரை
|
|
ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி
|
|
85
|
வலமுறை மும்முறை வந்தனை செய்துஅவ்
|
|
|
|
|
|
உலக அறவியின் ஒருதனி ஏறிப்
|
|
|
பதியோர் தம்மொடு பலர்தொழுது
ஏத்தும்
|
|
|
முதியோள் கோட்டம் மும்மையின்
வணங்கிக்
|
|
|
கந்துஉடை நெடுநிலைக் காரணம்
காட்டிய
|
|
90
|
தம்துணைப் பாவையைத் தான்தொழுது
ஏத்தி
|
உரை
|
|
|
|
|
வெயில்சுட வெம்பிய வேய்கரி
கானத்துக்
|
|
|
கருவி மாமழை தோன்றியது என்னப
|
|
|
பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு
|
|
|
அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி
|
|
95
|
ஆபுத் திரன்கை அமுத சுரபிஇஃது
|
|
|
|
|
|
யாவரும் வருக ஏற்போர் தாம்என,
|
|
|
ஊண்ஒலி அரவத்து ஒலிஎழுந் தன்றே
|
|
|
யாணர்ப் பேர்ஊர் அம்பலம் மருங்குஎன்.
|
உரை
|
|
|
|
|
|
|
|
உலக அறவி புக்க காதை முற்றிற்று.
|
|
|