|
20
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை, காயசண்டிகைவடிவுஎய்தக்
காயசண்டிகை
கணவனாகிய
காஞ்சனன்என்னும்
விச்சாதரன் வந்து காயசண்டிகையாம்
எனக்கருத அவள்
பின்னிலைவிடா உதயகுமரனைப் புதையிருட்கண்
உலகஅறவியில்
வாளால்எறிந்துபோன
பாட்டு
]
|
|
|
|
|
|
அரசன் ஆணையின்
ஆயிழை அருளால் |
|
|
நிரயக்
கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் |
|
|
தீப்பிறப்பு
உழந்தோர் செய்வினைப் பயத்தான் |
|
|
யாப்புஉடை
நற்பிறப்பு எய்தினர் போலப் |
|
5
|
பொருள்புரி
நெஞ்சில் புலவோன் கோயிலும் |
|
|
|
|
|
அருள்புரி
நெஞ்சத்து அறவோர் பள்ளியும் |
|
|
அட்டில்
சாலையும் அருந்துநர் சாலையும் |
|
|
கட்டுஉடைச்
செல்வக் காப்புஉடைத் தாக, |
உரை
|
|
ஆயிழை சென்றதூஉம்
ஆங்குஅவள் தனக்கு |
|
10
|
வீயா விழுச்சீர்
வேந்தன் பணித்ததூஉம் |
|
|
|
|
|
சிறையோர்
கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து |
|
|
அறவோர்
கோட்டம் ஆக்கிய வண்ணமும் |
|
|
கேட்டனன்
ஆகிஅத் தோட்டார் குழலியை |
உரை
|
|
மதியோர்
எள்ளினும் மன்னவன் காயினும் |
|
15
|
பொதியில்
நீங்கிய பொழுதில் சென்று |
|
|
|
|
|
பற்றினன்
கொண்டுஎன் பொன்தேர் ஏற்றிக் |
|
|
கற்றுஅறி
விச்சையும் கேட்டுஅவள் உரைக்கும் |
|
|
முதுக்குறை
முதுமொழி கேட்குவன் என்றே |
|
|
மதுக்கமழ்
தாரோன் மனம்கொண்டு எழுந்து |
|
20
|
பலர்பசி
களையப் பாவைதான் ஒதுங்கிய |
|
|
|
|
|
உலக அறவியின்
ஊடுசென்று ஏறலும், |
உரை
|
|
மழைசூழ்
குடுமிப் பொதியில் குன்றத்துக் |
|
|
கழைவளர்
கான்யாற்றுப் பழவினைப் பயத்தால் |
|
|
மாதவன்
மாதர்க்கு இட்ட சாபம் |
|
25
|
ஈர்ஆறு ஆண்டு
வந்தது வாராள் |
|
|
|
|
|
காயசண்
டிகைஎனக் கையறவு எய்திக் |
உரை
|
|
காஞ்சனன்
என்னும் அவள்தன் கணவன் |
|
|
ஓங்கிய
மூதூர் உள்வந்து இழிந்து |
|
|
பூத சதுக்கமும்
பூமரச் சோலையும் |
|
30
|
மாதவர்
இடங்களும் மன்றமும் பொதியிலும் |
|
|
|
|
|
தேர்ந்தனன்
திரிவோன் ஏந்துஇள வனமுலை |
|
|
மாந்தர்
பசிநோய் மாற்றக் கண்டுஆங்கு, |
உரை
|
|
இன்றுநின்
கையின் ஏந்திய பாத்திரம் |
|
|
ஒன்றே ஆயினும்
உண்போர் பலரால் |
|
35
|
ஆனைத் தீநோய்
அரும்பசி களைய |
|
|
|
|
|
வான வாழ்க்கையர்
அருளினர் கொல்எனப் |
|
|
பழைமைக்
கட்டுரை பலபா ராட்டவும், |
உரை
|
|
விழையா
உள்ளமொடு அவன்பால் நீங்கி |
|
|
உதய குமரன்
தன்பால் சென்று |
உரை
|
40
|
நரைமூ தாட்டி
ஒருத்தியைக் காட்டித் |
|
|
|
|
|
தண்அறல்
வண்ணம் திரிந்துவே றாகி |
|
|
வெண்மணல்
ஆகிய கூந்தல் காணாய் |
|
|
பிறைநுதல்
வண்ணம் காணா யோநீ |
|
|
நரைமையில்
திரைதோல் தகைஇன்று ஆயது |
|
45
|
விறல்வில்
புருவம் இவையும் காணாய் |
|
|
|
|
|
இறவின்
உணங்கல் போன்றுவே றாயின |
|
கழுநீர்க்
கண்காண் வழுநீர் சுமந்தன |
|
|
குமிழ்மூக்கு
இவைகாண் உமிழ்சீ ஒழுக்குவ |
|
|
நிரைமுத்து
அனைய நகையும் காணாய் |
|
50
|
சுரைவித்து
ஏய்ப்பப் பிறழ்ந்துவேறு ஆயின |
|
|
|
|
|
இலவுஇதழ்ச்
செவ்வாய் காணா யோநீ |
|
|
புலவுப் புண்போல்
புலால்புறத் திடுவது |
|
|
வள்ளைத்
தாள்போல் வடிகாது இவைகாண் |
|
|
உள்ஊன்
வாடிய உணங்கல் போன்றன |
|
55
|
இறும்பூது
சான்ற முலையும் காணாய் |
|
|
|
|
|
வெறும்பை
போல வீழ்ந்துவேறு ஆயின |
|
|
தாழ்ந்துஒசி
தெங்கின் மடல்போல் திரங்கி |
|
|
வீழ்ந்தன
இளவேய்த் தோளும் காணாய் |
|
|
நரம்பொடு
விடுதோல் உகிர்த்தொடர் கழன்று |
|
60
|
திரங்கிய
விரல்கள் இவையும் காணாய் |
|
|
|
|
|
வாழைத் தண்டே
போன்ற குறங்குஇணை |
|
|
தாழைத் தண்டின்
உணங்கல் காணாய் |
|
|
ஆவக் கணைக்கால்
காணா யோநீ |
|
|
மேவிய நரம்போடு
என்புபுறம் காட்டுவ |
|
65
|
தளிர்அடி
வண்ணம் காணா யோநீ |
|
|
|
|
|
முளிமுதிர்
தெங்கின் உதிர்காய் உணங்கல் |
|
|
பூவினும்
சாந்தினும் புலால்மறைத்து யாத்துத |
|
|
தூசினும் மணியினும்
தொல்லோர் வகுத்த |
|
|
வஞ்சம்
தெரியாய் மன்னவன் மகன்என |
|
70
|
விஞ்சை மகளாய்
மெல்இயல் உரைத்தலும், |
உரை
|
|
|
|
|
தன்பா ராட்டும்என்
சொல்பயன் கொள்ளாள் |
|
|
பிறன்பின்
செல்லும் பிறன்போல் நோக்கும் |
|
|
மதுக்கமழ்
அலங்கல் மன்னவன் மகற்கு |
|
|
முதுக்குறை
முதுமொழி எடுத்துக் காட்டிப் |
|
75
|
பவளக் கடிகையில்
தவளவாள் நகையும் |
|
|
|
|
|
குவளைச்
செங்கணும் குறிப்பொடு வழாஅள் |
|
|
ஈங்குஇவன்
காதலன் ஆதலின் ஏந்துஇழை |
|
|
ஈங்குஒழிந்
தனள்என இகல்எரி பொத்தி |
|
|
மற்றுஅவள்
இருந்த மன்றப் பொதியிலுள் |
|
80
|
புற்றுஅடங்கு
அரவின் புக்குஒளித்து அடங்கினன் |
|
|
|
|
|
காஞ்சனன்
என்னும் கதிர்வாள் விஞ்சையன், |
உரை
|
|
ஆங்குஅவள்
உரைத்த அரசிளங் குமரனும் |
|
|
களையா வேட்கை
கைஉதிர்க் கொள்ளான் |
|
|
வளைசேர்
செங்கை மணிமே கலையே |
|
85
|
காயசண் டிகையாய்க்
கடிஞை ஏந்தி |
|
|
|
|
|
மாய விஞ்சையின்
மனம்மயக் குறுத்தனள் |
|
|
அம்பல மருங்கில்
அயர்ந்துஅறிவு உரைத்தஇவ் |
|
|
வம்பலன் தன்னொடுஇவ் வைகுஇருள் ஒழியாள் |
|
|
இங்குஇவள்
செய்தி இடைஇருள் யாமத்து |
|
90
|
வந்துஅறி
குவம்என மனம்கொண்டு எழுந்து |
|
|
|
|
|
வான்தேர்ப்
பாகனை மீன்திகழ் கொடியனைக் |
|
|
கருப்பு வில்லியை
அருப்புக்கணை மைந்தனை |
|
|
உயாவுத் துணையாக
வயாவொடும் போகி, |
உரை
|
|
ஊர்துஞ்சு
யாமத்து ஒருதனி எழுந்து |
|
95
|
வேழம் வேட்டுஎழும்
வெம்புலி போலக் |
|
|
|
|
|
கோயில்
கழிந்து வாயில் நீங்கி |
|
|
ஆயிழை இருந்த
அம்பலம் அணைந்து |
|
|
வேக வெந்தீ
நாகம் கிடந்த |
|
|
போகுஉயர்
புற்றுஅளை புகுவான் போல |
|
100
|
ஆகம் தோய்ந்த
சாந்துஅலர் உறுத்த |
|
|
|
|
|
ஊழ்அடி இட்டுஅதன்
உள்அகம் புகுதலும் |
உரை
|
|
ஆங்குமுன்
இருந்த அலர்தார் விஞ்சையன் |
|
|
ஈங்குஇவன்
வந்தனன் இவள்பால் என்றே |
|
|
வெஞ்சின
அரவம் நஞ்சுஎயிறு அரும்பத் |
|
105
|
தன்பெரு
வெகுளியின் எழுந்துபை விரித்தென |
|
|
|
|
|
இருந்தோன்
எழுந்து பெரும்பின் சென்றுஅவன் |
|
|
சுரும்புஅறை
மணித்தோள் துணிய வீசிக் |
|
|
காயசண்
டிகையைக் கைக்கொண்டு அந்தரம் |
|
|
போகுவல்
என்றே அவள்பால் புகுதலும், |
உரை
|
110
|
நெடுநிலைக்
கந்தின் இடவயின் விளங்கக் |
|
|
|
|
|
கடவுள் எழுதிய
பாவைஆங்கு உரைக்கும்: |
|
|
அணுகல் அணுகல்
விஞ்சைக் காஞ்சன |
|
|
மணிமே கலைஅவள்
மறைந்துஉரு எய்தினள், |
|
|
காயசண்
டிகைதன் கடும்பசி நீங்கி |
|
115
|
வானம் போவுழி
வந்தது கேளாய் |
உரை
|
|
|
|
|
அந்தரம்
செல்வோர் அந்தரி இருந்த |
|
|
விந்த மால்வரை
மீமிசைப் போகார் |
|
|
போவார்
உளர்எனில் பொங்கிய சினத்தள் |
|
|
சாயையின் வாங்கித் தன்வயிற்று இடூஉம் |
|
120
|
விந்தம்
காக்கும் விந்தா கடிகை |
|
|
|
|
|
அம்மலை
மிசைப்போய் அவள்வயிற்று அடங்கினள். |
|
|
கைம்மை
கொள்ளேல் காஞ்சன இதுகேள்: |
உரை
|
|
ஊழ்வினை
வந்துஇங்கு உதய குமரனை |
|
|
ஆர்உயிர்
உண்ட தாயினும் அறியாய் |
|
125
|
வெவ்வினை
செய்தாய் விஞ்சைக் காஞ்சன! |
|
|
|
|
|
அவ்வினை
நின்னையும் அகலாது ஆங்குஉறும் |
|
|
என்றுஇவை
தெய்வம் கூறலும் எழுந்து |
|
|
கன்றிய நெஞ்சின்
சுடுவினை உருத்துஎழ |
|
|
விஞ்சையன்
போயினன் விலங்குவிண் படர்ந்துஎன. |
உரை
|
|
|
|
|
உதயகுமரனை
வாளால் எறிந்தகாதை முற்றிற்று.
|
|
|