|
23 சிறைவிடு காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை சிறைவீடுசெய்த இராசமா
தேவி
|
|
|
குறைகொண்டிரப்பச்
சீலம்கொடுத்த பாட்டு
]
|
|
|
|
|
|
மன்னவன்
அருளால் வாசந் தவைஎனும் |
|
|
நல்நெடுங்
கூந்தல் நரைமூ தாட்டி |
|
|
அரசர்க்கு
ஆயினும் குமரற்கு ஆயினும் |
|
|
திருநிலக்
கிழமைத் தேவியர்க்கு ஆயினும் |
|
5
|
கட்டுரை
விரித்தும் கற்றவை பகர்ந்தும் |
|
|
|
|
|
பட்டவை துடைக்கும்
பயங்கெழு மொழியினள் |
|
|
இலங்குஅரி
நெடுங்கண் இராசமா தேவி |
|
|
கலங்குஅஞர்
ஒழியக் கடிதுசென்று எய்தி |
|
|
அழுதுஅடி வீழாது
ஆயிழை தன்னைத் |
|
10
|
தொழுதுமுன்
நின்று தோன்ற வாழ்த்திக் |
உரை
|
|
|
|
|
கொற்றம்
கொண்டு குடிபுறம் காத்தும் |
|
|
செற்ற தெவ்வர்
தேஎம்தமது ஆக்கியும் |
|
|
தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து |
|
|
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென |
|
15
|
மூத்து விளிதல்இக்
குடிப்பிறந் தோர்க்கு |
|
|
|
|
|
நாப்புடை
பெயராது நாணுத்தகவு உடைத்தே |
உரை
|
|
தன்மண் காத்தன்று
பிறர்மண் கொண்டன்று |
|
|
என்எனப்
படுமோ நின்மகன் மடிந்தது! |
|
|
மன்பதை
காக்கும் மன்னவன் தன்முன் |
|
20
|
துன்பம் கொள்ளேல்
என்றுஅவள் போயபின், |
உரை
|
|
|
|
|
கையாற்று
உள்ளம் கரந்துஅகத்து அடக்கிப் |
|
|
பொய்யாற்று
ஒழுக்கம் கொண்டுபுறம் மறைத்து |
|
|
வஞ்சம்
செய்குவன் மணிமே கலையைஎன்று |
|
|
அம்சில்
ஓதி அரசனுக்கு ஒருநாள் |
|
25
|
பிறர்பின்
செல்லாப் பிக்குணிக் கோலத்து |
|
|
|
|
|
அறிவு திரிந்தோன்
அரசுஇயல் தான்இலன் |
|
|
கரும்புஉடைத்
தடக்கைக் காமன் கையற |
|
|
அரும்பெறல்
இளமை பெரும்பிறிது ஆக்கும் |
|
|
அறிவு தலைப்பட்ட
ஆயிழை தனக்குச் |
|
30
|
சிறைதக்
கன்று செங்கோல் வேந்துஎனச் |
உரை
|
|
|
|
|
சிறப்பின்
பாலார் மக்கள் அல்லார் |
|
|
மறப்பின்
பாலார் மன்னர்க்கு என்பது |
|
|
அறிந்தனை
ஆயின்இவ் ஆயிழை தன்னைச் |
|
|
செறிந்த
சிறைநோய் தீர்க்கென்று இறைசொல, |
உரை
|
35
|
என்னோடு
இருப்பினும் இருக்கஇவ் இளங்கொடி |
|
|
|
|
|
தன்ஓடு எடுப்பினும்
தகைக்குநர் இல்என்று |
|
|
அங்குஅவள்
தனைக்கூஉய் அவள்தன் னோடு |
|
|
கொங்குஅவிழ்
குழலாள் கோயிலுள் புக்குஆங்கு, |
உரை
|
|
அறிவு திரிந்துஇவ்
அகல்நகர் எல்லாம் |
|
40
|
எறிதரு கோலம்யான்
செய்குவல் என்றே |
|
|
|
|
|
மயல்பகை
ஊட்ட மறுபிறப்பு உணர்ந்தாள் |
|
|
அயர்ப்பது
செய்யா அறிவினள் ஆக, |
உரை
|
|
கல்லா இளைஞன்
ஒருவனைக் கூஉய் |
|
|
வல்லாங்குச்
செய்து மணிமே கலைதன் |
|
45
|
இணைவளர்
இளமுலை ஏந்துஎழில் ஆகத்துப் |
|
|
|
|
|
புணர்குறி
செய்து பொருந்தினள் என்னும் |
|
|
பான்மைக்
கட்டுரை பலர்க்குஉரை என்றே |
|
|
காணம் பலவும்
கைநிறை கொடுப்ப, |
உரை
|
|
ஆங்குஅவன்
சென்றுஅவ் ஆயிழை இருந்த |
|
50
|
பாங்கில்
ஒருசிறைப் பாடுசென்று அணைதலும், |
|
|
|
|
|
தேவி வஞ்சம்
இதுஎனத் தெளிந்து |
|
|
நாஇயல்
மந்திரம் நடுங்காது ஓதி |
|
|
ஆண்மைக்
கோலத்து ஆயிழை இருப்பக் |
|
|
காணம் பெற்றோன்
கடுந்துயர் எய்தி |
|
55
|
அரசர் உரிமையில்
ஆடவர் அணுகார் |
|
|
|
|
|
நிரயக்
கொடுமகள் நினைப்புஅறி யேன்என்று |
|
|
அகநகர்
கைவிட்டு ஆங்குஅவன் போயபின், |
உரை
|
|
மகனைநோய்
செய்தாளை வைப்பது என்என்று |
|
|
உய்யா நோயின்
ஊண்ஒழிந் தனள்எனப் |
|
60
|
பொய்ந்நோய்
காட்டிப் புழுக்குஅறை அடைப்ப |
|
|
|
|
|
ஊண்ஒழி
மந்திரம் உடைமையின் அந்த |
|
|
வாள்நுதல்
மேனி வருந்தாது இருப்ப, |
|
|
ஐஎன விம்மி
ஆயிழை நடுங்கிச் |
|
|
செய்தவத்
தாட்டியைச் சிறுமை செய்தேன் |
|
65
|
என்மகற்கு
உற்ற இடுக்கண் பொறாது |
|
|
|
|
|
பொன்நேர்
அனையாய் பொறுக்கென்று அவள்தொழ, |
உரை
|
|
நீல பதிதன்
வயிற்றில் தோன்றிய |
|
|
ஏலம் கமழ்தார்
இராகுலன் தன்னை |
|
|
அழல்கண்
நாகம் ஆர்உயிர் உண்ண |
|
70
|
விழித்தல்
ஆற்றேன் என்உயிர் சுடுநாள் |
|
|
|
|
|
யாங்குஇருந்து
அமுதனை இளங்கோன் தனக்குப் |
|
|
பூங்கொடி
நல்லாய் பொருந்தாது செய்தனை |
|
|
உடற்குஅழு
தனையோ உயிர்க்குஅழு தனையோ |
|
|
உடற்குஅழு
தனையேல் உன்மகன் தன்னை |
|
75
|
எடுத்துப்
புறங்காட்டு இட்டனர் யாரே |
|
|
|
|
|
உயிர்க்குஅழு
தனையேல் உயிர்புகும் புக்கில் |
|
|
செயப்பாட்டு
வினையால் தெரிந்துஉணர்வு அரியது |
|
|
அவ்வுயிர்க்கு
அன்பினை ஆயின் ஆய்தொடி |
|
|
எவ்வுயிர்க்கு
ஆயினும் இரங்கல் வேண்டும் |
உரை
|
80
|
மற்றுஉன்
மகனை மாபெருந் தேவி |
|
|
|
|
|
செற்ற கள்வன்
செய்தது கேளாய்: |
|
|
மடைக்கலம்
சிதைய வீழ்ந்த மடையனை |
|
|
உடல்துணி
செய்துஆங்கு உருத்துஎழும் வல்வினை |
|
|
நஞ்சுவிழி
அரவின் நல்உயிர் வாங்கி |
|
85
|
விஞ்சையன்
வாளால் வீட்டியது அன்றே! |
உரை
|
|
|
|
|
யாங்குஅறிந்
தனையோ ஈங்குஇது நீஎனில் |
|
|
பூங்கொடி
நல்லாய் புகுந்தது இதுஎன |
|
|
மொய்ம்மலர்ப்
பூம்பொழில் புக்கது முதலாத் |
|
|
தெய்வக்
கட்டுரை தெளிந்ததை ஈறா |
|
90
|
உற்றதை எல்லாம்
ஒழிவுஇன்று உரைத்து, |
உரை
|
|
|
|
|
மற்றும்
உரைசெயும் மணிமே கலைதான |
|
|
மயல்பகை
ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன் |
|
|
அயர்ப்பது
செய்யா அறிவினேன் ஆயினேன் |
|
|
கல்லாக்
கயவன் கார்இருள் தான்வர |
|
95
|
நல்லாய்
ஆண்உரு நான்கொண்டு இருந்தேன், |
|
|
|
|
|
ஊண்ஒழி
மந்திரம் உடைமையின் அன்றோ |
|
|
மாண்இழை
செய்த வஞ்சம் பிழைத்தது. |
உரை
|
|
அந்தரம்
சேறலும் அயல்உருக் கோடலும் |
|
|
சிந்தையின்
கொண்டிலேன் சென்ற பிறவியில் |
|
100
|
காதலன் பயந்தோய்
கடுந்துயர் களைந்து |
|
|
|
|
|
தீதுஉறு வெவ்வினை
தீர்ப்பது பொருட்டால் |
உரை
|
|
தையால்
உன்தன் தடுமாற்று அவலத்து |
|
|
எய்யா மையல்தீர்ந்து
இன்உரை கேளாய்: |
உரை
|
|
ஆள்பவர்
கலக்குற மயங்கிய நல்நாட்டுக் |
|
105
|
காருக மடந்தை
கணவனும் கைவிட |
|
|
|
|
|
ஈன்ற குழவியொடு
தான்வேறு ஆகி |
|
|
மான்றுஓர்
திசைபோய் வரையாள் வாழ்வுழிப் |
|
|
புதல்வன்
தன்னைஓர் புரிநூல் மார்பன் |
|
|
பதியோர்
அறியாப் பான்மையின் வளர்க்க |
|
110
|
ஆங்குஅப்
புதல்வன் அவள்திறம் அறியான் |
|
|
|
|
|
தான்புணர்ந்து
அறிந்துபின் தன்உயிர் நீத்ததும், |
உரை
|
|
நீர்நசை
வேட்கையின் நெடுங்கடம் உழலும் |
|
|
சூல்முதிர்
மடமான் வயிறுகிழித்து ஓடக் |
|
|
கான வேட்டுவன்
கடுங்கணை துரப்ப |
|
115
|
மான்மறி
விழுந்தது கண்டு மனம்மயங்கிப் |
|
|
|
|
|
பயிர்க்குரல்
கேட்டுஅதன் பான்மையன் ஆகி |
|
|
உயிர்ப்பொடு
செங்கண் உகுத்த நீர்கண்டு |
|
|
ஓட்டி எய்தோன்
ஓர்உயிர் துறந்ததும் |
|
|
கேட்டும்
அறிதியோ வாள்தடங் கண்ணி! |
உரை
|
120
|
கடாஅ யானைமுன்
கள்கா முற்றோர் |
|
|
|
|
|
விடாஅது
சென்றுஅதன் வெண்கோட்டு வீழ்வது |
|
|
உண்ட கள்ளின்
உறுசெருக்கு ஆவது |
|
|
கண்டும்
அறிதியோ காரிகை நல்லாய்! |
உரை
|
|
பொய்யாற்று
ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர் |
|
125
|
கையாற்று
அவலம் கடந்ததும் உண்டோ? |
உரை
|
|
|
|
|
களவுஏர் வாழ்க்கையர்
உறூஉம் கடுந்துயர் |
|
|
இளவேய்த்
தோளாய்க்கு இதுஎன வேண்டா |
உரை
|
|
மன்பேர்
உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை |
|
|
துன்பம்
தருவன துறத்தல் வேண்டும் |
உரை
|
130
|
கற்ற கல்வி
அன்றால் காரிகை |
|
|
|
|
|
செற்றம்
செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் |
|
|
மல்லல்மா
ஞாலத்து வாழ்வோர் என்போர் |
|
|
அல்லல் மாக்கட்கு
இல்லது நிரப்புநர் |
|
|
திருந்துஏர்
எல்வளை செல்உலகு அறிந்தோர் |
|
135
|
வருந்தி வந்தோர்
அரும்பசி களைந்தோர் |
|
|
|
|
|
துன்பம் அறுக்கும்
துணிபொருள் உணர்ந்தோர் |
|
|
மன்பதைக்கு
எல்லாம் அன்புஒழி யார்என |
|
|
ஞான நல்நீர்
நன்கனம் தெளித்துத் |
|
|
தேன்ஆர்
ஓதி செவிமுதல் வார்த்து |
|
140
|
மகன்துயர்
நெருப்பா மனம்விறகு ஆக |
|
|
|
|
|
அகம்சுடு
வெந்தீ ஆயிழை அவிப்ப, |
உரை
|
|
தேறுபடு சின்னீர்
போலத் தெளிந்து |
|
|
மாறுகொண்டு
ஓரா மனத்தினன் ஆகி |
|
|
ஆங்குஅவள்
தொழுதலும், ஆயிழை பொறாஅள் |
|
145
|
தான்தொழுது
ஏத்தித் தகுதி செய்திலை |
|
|
|
|
|
காதலன்
பயந்தோய் அன்றியும் காவலன் |
|
|
மாபெருந்
தேவிஎன்று எதிர்வணங் கினள்என். |
உரை
|
|
|
|
|
சிறைவிடு காதை முற்றிற்று.
|
|
|