6.6 தொகுப்புரை கற்பை ஆண் - பெண் இருவர்க்கும் பொதுவாக்கிக் 'கற்பு நிலை' என்று பாடியிருப்பதும், 'புதுமைப் பெண்'ணைப் படைத்திருப்பதும், 'பாஞ்சாலி சபதத்தைக் காப்பியப் பொருள் ஆக்கியிருப்பதும், பெண்களின் கற்பை அழிப்பதற்கு முயலும், பெண்களுக்குப் பல வகையிலும் கொடுமைகள் செய்யும் ஆண்களுக்கு எதிராக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரல் கொடுத்திருப்பதும், 'பெண் விடுதலை'க்கான வழிமுறைகளைச் சுட்டிக்காட்டி இருப்பதும், 'விதவா விவாகம் செய்யத்தக்கது' என்ற முற்போக்கான எண்ணத்தைப் பதிவு செய்திருப்பதும் பாரதியார் எப்போதும் பெண்களின் கட்சி பேசுகிற ஓர் ஆண்மை வீரர் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன.
|