பாரதிதாசன்
தமிழ்மொழி மீதும், தமிழர் மீதும் தமிழ்நாட்டின்
மீதும் பாடிய பல பாடல்களில் அவர் உணர்த்தும் தமிழ் உணர்வு
வெளிப்படுகிறது. இப்பாடல்களில், தமிழ்மொழியின் சிறப்புக்
கூறுகளையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும்,
தமிழ்நாட்டின் பெருமைகளையும் எடுத்துரைக்கிறார்.
இப்பாடத்தில்
சொல்லப்பட்ட கருத்துகளில் இருந்து, பாரதிதாசன்,
தமிழைத் தன் உயிர்போல் நேசித்தமை புலப்படும்.
தமிழ்
எத்தகைய இனிமையான மொழி என்பதுவும், தமிழ் மக்களின் வீரம்,
கற்பு ஆகியவற்றில் கவிஞருக்கு இருந்த மதிப்பு எத்தகையது
என்பதுவும் புலப்படும்.
|