1.5
தொகுப்புரை
நந்தம் தமிழ் மொழியின்
இயல்பு; அது மூவகைப் படும்;
இயற்றமிழில் இலக்கணம் அடங்கும்; இலக்கியங்களோடு இலக்கணம்
வகுக்கப் பெற்றது; இலக்கணம் என்பதன் பொருள்;
இலக்கணம்
காலந்தோறும் வளர்ச்சியுற்று இந் நாளில் ஆறு வகைமையில்
விரிந்து நிற்கின்றது; அகம்-புறம் என்பவற்றின் பொருள்; இவற்றுள்
புறப்பொருள் தொல்காப்பியர் காலத்தில் ஏழாக வகைமையுற்று,
அவர் காலத்திலேயே பன்னிரண்டு பகுதியாகவும் வளர்ச்சி கண்டது;
அவ்வளர்ச்சியை ஏற்றுச் செய்யப்பட்ட வழிநூல்
புறப்பொருள்
வெண்பாமாலை; புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பெயர்க்
காரணம்; அதன் சிறப்பு; இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், மரபு,
சமயம், காலம் ஆகியவை; போர் நிகழ்வு; உலக
இயற்கை;
போர்க்கான காரணங்கள்;தமிழ் மன்னரிடத்து அறப்போர் நிலவியது;
மன்னர்கள் போர்க்கு முன்னரும் போர்க் களத்திலும் கடைப்பிடித்த
அறநெறிகள்; அவற்றுள் ஒன்றே ‘ஆநிரை கவர்தல்’ முதலியவை
விரித்துக் கூறப்பட்டன. திணை-துறைகட்கு உரிய பொருள்கள்;
போர் ஒழுகலாற்றின் படிநிலைகள்; ஆசிரியர் நூலை இயற்றிய திறம்;
உரையாசிரியர் பெயர், பிறப்பிடம், காலம்,
உரைப்போக்கு
முதலியவையும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
1) |
புறப்பொருள்
வெண்பா மாலை பெயர்க்காரணம் தருக. |
விடை |
2) |
புறப்பொருள்
வெண்பா மாலை எத்தனை படலங்களை
உடையது? அவை யாவை? |
விடை |
3) |
அகம்,
புறம் என்பதன் பொருள் என்ன? இலக்கணக் குறிப்புத் தருக. |
விடை |
4) |
தொல்காப்பியர்
கூறும் அகத்திணை எத்தனை?
புறத்திணை எத்தனை? ஏன்? |
விடை |
5) |
போர்க்கான
பொதுக் காரணங்கள் மூன்றனைக் குறிக்க. |
விடை |
6) |
போர்க்காலத்தில்
காக்கப்பட வேண்டியவர்கள் சிலரைக் குறிக்க. |
விடை |
7) |
பாடாண்திணையாவது
யாது? விளக்குக. |
விடை |
8) |
புறம்,
புறப்புறம், அகப்புறம் ஆகியவற்றுள் அடங்கும்
திணைகள் யாவை? |
விடை |
9) |
புறப்பொருள்
வெண்பா மாலையில் வரும் ‘கொளு’
என்பது யாது? |
விடை |
|