முகப்பு |
மதுரை மருதன் இளநாகனார் |
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
216. மருதம் |
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும், |
||
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்; |
||
கண்ணுறு விழுமம் கை போல் உதவி, |
||
நம் உறு துயரம் களையார்ஆயினும், |
||
5 |
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே; |
|
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் |
||
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், |
||
ஏதிலாளன் கவலை கவற்ற, |
||
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் |
||
10 |
கேட்டோர் அனையராயினும், |
|
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
283. நெய்தல் |
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற |
||
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் |
||
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!- |
||
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய, |
||
5 |
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை |
|
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, |
||
ஏமுற விளங்கிய சுடரினும், |
||
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே? | உரை | |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
302. பாலை |
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
||
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
||
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
||
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
||
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
||
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
||
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
||
பழங்கண் முது நெறி மறைக்கும், |
||
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? | உரை |
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. | உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
341. குறிஞ்சி |
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின், |
||
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் |
||
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து, |
||
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக் |
||
5 |
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் |
|
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே |
||
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென, |
||
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு |
||
வேறு புல வாடை அலைப்ப, |
||
10 |
துணை இலேம், தமியேம், பாசறையேமே. | உரை |
வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
362. பாலை |
வினை அமை பாவையின் இயலி, நுந்தை |
||
மனை வரை இறந்து வந்தனை; ஆயின், |
||
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி |
||
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த |
||
5 |
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
|
நீ விளையாடுக சிறிதே; யானே, |
||
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
||
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, |
||
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; |
||
10 |
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே! | உரை |
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்
|
392. நெய்தல் |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
||
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
||
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
||
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
||
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
||
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
||
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
||
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
||
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. | உரை | |
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|