முகப்பு |
பொறையன் |
8. குறிஞ்சி |
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண், |
||
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல், |
||
திரு மணி புரையும் மேனி மடவோள் |
||
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்! |
||
5 |
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5 |
|
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும் |
||
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள் |
||
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் |
||
திண் தேர்ப் பொறையன் தொண்டி- |
||
10 |
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே! |
உரை |
இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.
|
18. பாலை |
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
||
வருவர் வாழி-தோழி!-மூவன் |
||
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
||
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
||
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
||
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
||
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
||
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
||
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. |
உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. |
உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|