முகப்பு |
ஈங்கை |
2. பாலை |
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
||
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
||
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
||
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
||
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
||
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
||
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
||
காலொடு பட்ட மாரி |
||
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! |
உரை |
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
86. பாலை |
அறவர், வாழி-தோழி! மறவர் |
||
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
||
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
||
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
||
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
||
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
||
நல் தளிர் நயவர நுடங்கும் |
||
முற்றா வேனில் முன்னி வந்தோரே! |
உரை | |
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
205. பாலை |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
||
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
||
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
||
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
||
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
||
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
||
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
||
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! |
உரை | |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. |
உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|