முகப்பு |
மாமரம் |
9. பாலை |
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
||
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
||
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
||
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
||
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
||
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
||
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
||
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
||
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
||
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. |
உரை | |
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. |
உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! |
உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. |
உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
243. பாலை |
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
||
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
||
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
||
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
||
5 |
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, |
||
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
||
மெய் உற இருந்து மேவர நுவல, |
||
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
||
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? |
உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|