முகப்பு |
மதுரை மருதன் இளநாகனார் |
77. பாலை |
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
||
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
||
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
||
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
||
அரிய கானம் சென்றோர்க்கு |
||
எளிய ஆகிய தட மென் தோளே. |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? |
உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? |
உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |
367. மருதம் |
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் |
||
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், |
||
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே- |
||
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் |
||
பூசல் ஆயம் புகன்று இழி அருவி |
||
மண்ணுறு மணியின் தோன்றும் |
||
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே. |
உரை | |
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன் |