2.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை தமிழ்மொழியில் காணப்படும் சில சிற்றிலக்கிய வகைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்துள்ளீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

குறவஞ்சி, தூது, மடல், உலா, பள்ளு, கலம்பகம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் பெயர்க்காரணம் பற்றித் தெரிந்திருப்பீர்கள்.
இந்த இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிந்திருப்பீர்கள்.
இந்த இலக்கிய வகைகளின் இலக்கணம் பற்றி உணர்ந்திருப்பீர்கள்.
இந்த இலக்கிய வகைகளின் அமைப்பையும், இவற்றில் கூறப்படும் செய்திகளையும் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இந்த இலக்கிய வகைகளின் சிறப்புகளுள் சிலவற்றை அறிந்திருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

மடல் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?

விடை
2.

மடல் எந்த உருவத்தில் செய்யப்பட்டிருக்கும்?

விடை
3.

மடல் இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல்கள் யாவை?

விடை
4.

பெண்கள் மடல் ஏறுதல் எப்போது காட்டப்படும்?

விடை
5.

உலா இலக்கியம் என்ற பெயர்வரக் காரணம் யாது?

விடை
6.

உலா இலக்கியத்தில் இடம் பெறும் இரு நிலைகள் யாவை?

விடை

7.

உலா இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவர்களாக அமைவோர் யாவர்?

விடை
8.

முதல் உலா இலக்கிய நூல் யாது?

விடை
9.

பள்ளு இலக்கியம் என்று பெயர்வரக் காரணம் யாது?

விடை
10.

உழவர்கள் உழவுத் தொழிலின் போது பாடும் பாடல்கள் யாவை?

விடை
11.

பள்ளு இலக்கிய வகையில் முதல் நூல் யாது?

விடை
12.

பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்களில் இரண்டினைக் கூறுக.

விடை
13.
கலம்பகம் என்று இந்த இலக்கிய வகைக்குப் பெயர் ஏற்படக் காரணம் யாது?
விடை
14.

கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல் யாது?

விடை