17. பொருள்

பொருள்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  செய்யுளின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் -------- எனப்பெறும்.

செய்யுளின் பாடுபொருள் பற்றிக் கூறும் இலக்கணம் பொருள் இலக்கணம் எனப்பெறும்

2.  பொருள் இலக்கணம் ------------, ------------- என இருவகை பெறும்.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப் பெறும்.

3.  முல்லைத் திணை என்பது ----------- பகுதியாகும்.

முல்லைத் திணை என்பது காடும் காடு சார்ந்த பகுதியாகும்.

4.  தத்தம் இயல்பில் குறைந்த குறிஞ்சியும் முல்லையும் -------- எனப்பெறும்.

தத்தம் இயல்பில் குறைந்த குறிஞ்சியும் முல்லையும் பாலை நிலம் எனப்பெறும்.

5.  மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களும் --------.

மார்கழி, தை ஆகிய இரண்டு திங்களும் முன்பனிக் காலம்.

6.  குறிஞ்சி நிலக் கடவுள் -----------.

குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்.

7.  அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது ---------.

அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது புறப்பொருள்.

8.  வெட்சித்திணை என்பது -----------.

வெட்சித்திணை என்பது பசுக்கூட்டங்களைக் கவர்தல்.

9.  பகைவரின் மதிலை வளைத்தல் -----------.

பகைவரின் மதிலை வளைத்தல் உழிஞைத் திணை.

10.  அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலானவற்றைப் பாடும் புறத்திணை ------------.

அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலானவற்றைப் பாடும் புறத்திணை பாடாண் திணை ஆகும்.