அருள்மிகு திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்
- கோவில் விவரங்கள்
- சிறப்புகள்
- செல்லும் வழி மற்றும் வரைபடம்
- காட்சிக்கூடம்
Other Names :
திருநாவலீஸ்வரர், பக்தஜனேஸ்வரர், இராஜாதித்த ஈஸ்வரமுடையார், திருத்தொண்டீசுவரர்
Lord Name :
பக்தஜனேஸ்வரர், திருநாவலீசுவரர், ஜம்புநாதேசுவரர்
Mother / Goddess Name :
சுந்தரநாயகி அம்மை, மனோன்மணி அம்மை
Tirukkulam / River :
கோமுகி தீர்த்தம், கருடதீர்த்தம், கெடிலநதி
Worship Time :
காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
Festivals :
ஆவணி மாதம் சுந்தரர் ஜனன விழா, ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குருபூஜை விழா, சித்திரை மாதம் 15 நாட்கள் தேர்த்திருவிழா, ஆடிமாதம் பூரம் நாளன்று மனோன்மணியம்மைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பெறும்.
History :
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும்பொழுது உண்டான ஆலகால நஞ்சை சிவபெருமான் உண்டார். ஆலகால நஞ்சு விந்தாக மாறி பூமியில் விழுந்து நாவல் காடாக மாறியது. அவ்விடமே திருநாவலூர் எனப் பெயர் பெறுகிறது.
Protecting Company :
இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
Nearest Temples Arc :
திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோயில், திருக்கோவிலூர் திரிவிக்கிரமர் கோயில்
Summary :
சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். சுந்தரரின் வளர்ப்புத் தந்தை. சுக்கிர தோஷம் நீங்க, ஆன்மீக பற்று ஏற்பட வழிபட வேண்டிய தலம்.இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.மக்கள் வழக்கில் மட்டும் கொச்சையாகத் 'திருநாமநல்லூர் ' என்று வழங்குகின்றனர்.சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய பெரும்பதி.இஃது சுந்தரரின் தாயாரான இசைஞானியார் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமுமாகும்.அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது. சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.இவர் பூராட நட்சத்திரத்திற்கு உகந்தவர்.கோயிலை அடுத்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரம் செய்த இடத்தில் திருமடம் ஒன்றை எழுப்பி உள்ளனர்.சுகிர தோஷம் நீங்க ஆன்மீக பற்று ஏற்பட வழிபட வேண்டிய தலம்.
Period / Ruler :
கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகன்
Inscription / Copper :
முதலாம் பராந்தகச் சோழனின் மகன் இராசாதித்தன் என்ற சோழ இளவரசன் இப்பகுதியில் சோழப்படைகளை நிர்வகித்து வந்தான். இப்பகுதி மௌலி கிராமம் என்று பண்டு அழைக்கப்பட்டு இன்று கிராமம் என்று அழைக்கப்படுகிறது. மௌலி கிராமம் திருநாவலூருக்கு அருகில் அமைந்துள்ளது. திருநாவலூர் கல்வெட்டுகளில் இராசாதித்தியபுரம் என்று குறிக்கப்படுகின்றது. மேலும் இங்குள்ள சிவன் கோயில் இராஜாதித்தீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது பராந்தக சோழன் காலத்தில் தான். மூன்றாம் கிருஷ்ணனிடம் இப்பகுதியை இழந்த சோழப்பேரரசு மீண்டும் இராஜராஜன் காலத்தில் தான் இப்பகுதியை மீட்டது. மேலும் இக்கோயிலுக்கு பல கொடைகளும், தனியே நடராசர் திருமுன்னும் இராஜராஜன் காலத்தில் அமைக்கப்பட்டது.
Sculptures :
தென்முகக் கடவுள் இங்கு நின்ற நிலையில் இடப வாகனத்துடன் காட்சியளிக்கிறார். பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாருடன் சுந்தரருக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. நவக்கிரக சிற்பங்களில் சூரியன் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சுக்ரன் நிறுவி வழிபட்டதாக தலபுராணம் கூறும் இலிங்கம் உள்ளது. அம்மன் மனோன்மணி இங்கு விரிசடை கோலத்தில் தியான கோலத்தில் உள்ளார்.
Location :
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்-607 204, விழுப்புரம்
Temple Opening Time :
காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
Way :
சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்ப்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாக செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
Nearby Airport :
திருச்சி, சென்னை மீனம்பாக்கம்
சாலை வரைபடம்
Temple Gallery
-
பக்தஜனேஸ்வரர் கோயில், கோபுரம், திருநாவலூர், விழுப்புரம், கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு
-
பக்தஜனேஸ்வரர் கோயில், மண்டபம், திருநாவலூர், விழுப்புரம், கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு
-
பக்தஜனேஸ்வரர் கோயில், ஆண்-பெண் வாழ்வியல் சுதைச் சிற்பம், திருநாவலூர், விழுப்புரம், கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு
-
பக்தஜனேஸ்வரர் கோயில், பெண் வாழ்வியல் சுதைச் சிற்பம், திருநாவலூர், விழுப்புரம், கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு