முகப்பு |
பாலை பாடிய பெருங்கடுங்கோ |
16. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
||
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
||
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
||
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
||
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை | |
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
37. பாலை |
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; |
||
பிடி பசி களைஇய பெருங் கை வேழம் |
||
மென் சினை யாஅம் பொளிக்கும் |
||
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. |
உரை | |
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
124. பாலை |
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, |
||
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு |
||
இன்னா என்றிர்ஆயின், |
||
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? |
உரை | |
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
135. பாலை |
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் |
||
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என, |
||
நமக்கு உரைத்தோரும் தாமே, |
||
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே. |
உரை | |
'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ. |
137. பாலை |
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, |
||
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து |
||
இரவலர் வாரா வைகல் |
||
பல ஆகுக!-யான் செலவுறு தகவே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
தளை அவிழ் பல் போது கமழும் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. |
உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
231. மருதம் |
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்; |
||
சேரி வரினும் ஆர முயங்கார்; |
||
ஏதிலாளர் சுடலை போலக் |
||
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு, |
||
நல் அறிவு இழந்த காமம் |
||
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே. |
உரை | |
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. |
உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
283. பாலை |
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்; |
||
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச் |
||
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
||
சென்றனர் வாழி-தோழி-என்றும் |
||
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர் |
||
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த |
||
படு முடைப் பருந்து பார்த்திருக்கும் |
||
நெடு மூதிடைய நீர் இல் ஆறே. |
உரை | |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல் |
398. பாலை |
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் |
||
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, |
||
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் |
||
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய |
||
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, |
||
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, |
||
மெய்ம் மலி உவகையின் எழுதரு |
||
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. |
உரை | |
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப |