முகப்பு |
பனை (பெண்ணை, போந்தை) |
81. குறிஞ்சி |
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
||
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
||
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
||
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
||
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
||
கடலும் கானலும் தோன்றும் |
||
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. |
உரை | |
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
168. பாலை |
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
||
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
||
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
||
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
||
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
||
மணத்தலும் தணத்தலும் இலமே; |
||
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? |
உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
182. குறிஞ்சி |
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் |
||
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி, |
||
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, |
||
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, |
||
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ- |
||
கலிழ் கவின் அசைநடைப் பேதை |
||
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே? |
உரை | |
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன் |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |
293. மருதம் |
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப் |
||
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய் |
||
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் |
||
ஆதி அருமன் மூதூர் அன்ன, |
||
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை |
||
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப, |
||
வருமே சேயிழை, அந்தில் |
||
கொழுநற் காணிய; அளியேன் யானே! |
உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன் |
301. குறிஞ்சி |
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் |
||
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் |
||
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் |
||
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல், |
||
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் |
||
வாராதுஆயினும், வருவது போலச் |
||
செவிமுதல் இசைக்கும் அரவமொடு |
||
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே. |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன் |
372. குறிஞ்சி |
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய, |
||
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் |
||
கணம் கொள் சிமைய உணங்கும் கானல், |
||
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் |
||
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
||
புலர் பதம் கொள்ளா அளவை, |
||
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார் |
374. குறிஞ்சி |
எந்தையும் யாயும் உணரக் காட்டி |
||
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், |
||
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, |
||
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே- |
||
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, |
||
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த |
||
கூடினும் மயங்கிய மையல் ஊரே. |
உரை | |
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார் |