முகப்பு |
முல்லை |
126. முல்லை |
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் |
||
இவணும் வாரார்; எவணரோ?' என, |
||
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத் |
||
தொகு முகை இலங்கு எயிறு ஆக |
||
நகுமே-தோழி!-நறுந் தண் காரே. |
உரை | |
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி |
186. முல்லை |
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
||
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
||
எயிறு என முகையும் நாடற்குத் |
||
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, |
உரை | |
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |
188. முல்லை |
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
||
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
||
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
||
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. |
உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? |
உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |