முகப்பு |
ஆம்பல் |
46. மருதம் |
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன |
||
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ |
||
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து |
||
எருவின் நுண் தாது குடைவன ஆடி, |
||
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் |
||
புன்கண் மாலையும், புலம்பும், |
||
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன். |
80. மருதம் |
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
||
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
||
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
||
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
||
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
||
முனை ஆன் பெரு நிரை போல, |
||
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. |
உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |
84. பாலை |
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்; |
||
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
||
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
||
வேங்கையும் காந்தளும் நாறி, |
||
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. |
உரை | |
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |
117. நெய்தல் |
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் |
||
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு |
||
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் |
||
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் |
||
வாராது அமையினும் அமைக! |
||
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே. |
உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார் |
122. நெய்தல் |
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன |
||
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே |
||
வந்தன்று, வாழியோ, மாலை! |
||
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே! |
உரை | |
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார் |
178. மருதம் |
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
||
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
||
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
||
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
||
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
||
அரியம் ஆகிய காலைப் |
||
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. |
உரை | |
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |
300. குறிஞ்சி |
குவளை நாறும் குவை இருங் கூந்தல், |
||
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், |
||
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன |
||
நுண் பல் தித்தி, மாஅயோயே! |
||
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே; |
||
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் |
||
கடல் சூழ் மண்டிலம் பெறினும், |
||
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே. |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார் |