|
14 பாத்திர மரபு கூறிய காதை |
|
|
||
|
[ மணிமேகலைக்கு அறவணர் அமுதசுரபி |
|
|
என்னும் பாத்திரம் சிந்தாதேவி ஆபுத்திரற்குக் |
|
|
கொடுத்தவண்ணம் கூறிய பாட்டு ] |
|
|
||
|
ஆங்குஅவற்கு ஒருநாள் அம்பலப் பீடிகைப் |
|
|
பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்: |
உரை |
|
மாரி நடுநாள் வல்இருள் மயக்கத்து |
|
|
ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇத் |
|
5
|
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி |
|
|
||
|
வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும் |
|
|
ஏற்றுஊண் அல்லது வேற்றூண் இல்லோன் |
|
|
ஆற்றுவது காணான் ஆர்அஞர் எய்த, |
உரை |
|
கேள்இது மாதோ கெடுகநின் தீதுஎன |
|
10
|
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் |
|
|
||
|
தேவி சிந்தா விளக்குத் தோன்றி |
|
|
ஏடா அழியல் எழுந்துஇது கொள்ளாய் |
|
|
நாடுவறங் கூரினும்இவ் ஓடுவறம் கூராது |
|
|
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது |
|
15
|
தான்தொலைவு இல்லாத் தகைமையது என்றே |
|
|
||
|
தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும் |
உரை |
|
சிந்தா தேவி செழுங்கலை நியமத்து |
|
|
நந்தா விளக்கே நாமிசைப் பாவாய் |
|
|
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி |
|
20
|
ஏனோர் உற்ற இடர்களை வாய்எனத் |
|
|
||
|
தான்தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி, |
உரை |
|
ஆங்கவர் பசிதீர்த்து அந்நாள் தொட்டு |
|
|
வாங்குகை வருந்த மன்உயிர் ஓம்பலின் |
|
|
மக்களும் மாவும் மரம்சேர் பறவையும் |
|
25
|
தொக்குஉடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ |
|
|
||
|
பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம் |
|
|
இழும்என் சும்மை இடைஇன்று ஒலிப்ப, |
|
|
ஈண்டுநீர் ஞாலத்து இவன்செயல் இந்திரன் |
|
|
பாண்டு கம்பளம் துளக்கியது ஆகலின் |
உரை |
30
|
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி |
|
|
||
|
வளைந்த யாக்கைஓர் மறையோன் ஆகி |
|
|
மாஇரு ஞாலத்து மன்உயிர் ஓம்பும் |
|
|
ஆர்உயிர் முதல்வன் தன்முன் தோன்றி |
|
|
இந்திரன் வந்தேன் யாதுநின் கருத்து |
|
35
|
உன்பெருந் தானத்து உறுபயன் கொள்கென |
உரை |
|
||
|
வெள்ளை மகன்போல் விலாஇற நக்குஈங்கு |
|
|
எள்ளினன் போம்என்று எடுத்துஉரை செய்வோன் |
|
|
ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல் |
|
|
காண்தகு சிறப்பின்நும் கடவுளர் அல்லது |
|
40
|
அறம்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் |
|
|
||
|
நல்தவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர் |
|
|
யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு |
|
|
இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே |
உரை |
|
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்துஅவர் |
|
45
|
திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை |
|
|
||
|
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ |
|
|
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ |
|
|
யாவைஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும், |
|
|
புரப்போன் பாத்திரம் பொருந்துஊண் சுரந்துஈங்கு |
|
50
|
இரப்போர்க் காணாது ஏமாந் திருப்ப |
|
|
||
|
நிரப்புஇன்று எய்திய நீள்நிலம் அடங்கலும் |
|
|
பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென |
|
|
ஆங்குஅவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் |
|
|
ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உலகோர்க்கு அளித்தலும், |
உரை |
55
|
பன்னீ ராண்டு பாண்டிநல் நாடு |
|
|
||
|
மன்உயிர் மடிய மழைவளம் இழந்தது |
|
|
வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்பப் |
|
|
பசிப்புஉயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் |
|
|
ஆர்உயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை |
|
60
|
ஊண்ஒலி அரவம் ஒடுங்கிய தாகி |
|
|
||
|
விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும் |
|
|
நடவை மாக்களும் நகையொடு வைகி |
|
|
வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் |
|
|
முட்டா வாழ்க்கை முறைமைய தாக, |
உரை |
65
|
ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி |
|
|
||
|
ஊர்ஊர் தோறும் உண்போர் வினாஅய் |
|
|
யார்இவன் என்றே யாவரும் இகழ்ந்துஆங்கு |
|
|
அருந்தே மாந்த ஆர்உயிர் முதல்வனை |
|
|
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் |
|
70
|
திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள |
|
|
||
|
ஒருதனி வரூஉம் பெருமகன் போலத் |
|
|
தானே தமியன் வருவோன் தன்முன், |
|
|
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் |
|
|
சாவக நல்நாட்டுத் தண்பெயல் மறுத்தலின் |
|
75
|
ஊன்உயிர் மடிந்தது உரவோய் என்றலும், |
உரை |
|
||
|
அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது |
|
|
குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி |
|
|
அங்குஅந் நாட்டுப் புகுவதுஎன் கருத்துஎன |
|
|
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக் |
|
80
|
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் |
|
|
||
|
மால்இதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் |
|
|
தங்கியது ஒருநாள் தான்ஆங்கு இழிந்தனன் |
உரை |
|
இழிந்தோன் ஏறினன் என்றுஇதை எடுத்து |
|
|
வழங்குநீர் வங்கம் வல்இருள் போதலும், |
|
85
|
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி |
|
|
||
|
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் |
|
|
மன்உயிர் ஓம்பும்இம் மாபெரும் பாத்திரம் |
|
|
என்உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் |
|
|
தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் |
|
90
|
சுமந்துஎன் பாத்திரம் என்றனன் தொழுது |
உரை |
|
||
|
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின் |
|
|
ஓர்யாண்டு ஒருநாள் தோன்றுஎன விடுவோன் |
|
|
அருள்அறம் பூண்டுஆங்கு ஆர்உயிர் ஓம்புநர் |
|
|
உளர்எனில் அவர்கைப் புகுவாய் என்றுஆங்கு |
|
95
|
உண்ணா நோன்போடு உயிர்பதிப் பெயர்ப்புழி, |
உரை |
|
||
|
அந்நாள் ஆங்குஅவன் தன்பால் சென்றே |
|
|
என்உற் றனையோ என்றுயான் கேட்பத் |
|
|
தன்உற் றனபல தான்எடுத்து உரைத்தனன் |
|
|
குணதிசைத் தோன்றிக் கார்இருள் சீத்துக் |
|
100
|
குடதிசைச் சென்ற ஞாயிறு போல |
|
|
||
|
மணிபல் லவத்திடை மன்உடம்பு இட்டுத் |
|
|
தணியா மன்உயிர் தாங்கும் கருத்தொடு |
|
|
சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன் |
|
|
ஆவயிற்று உதித்தனன் ஆங்குஅவன் தான்என். |
உரை |
|
||
|
பாத்திர மரபு கூறிய காதை
முற்றிற்று. |
|
மேல் |