|
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் |
|
|
அடைந்த
காதை
|
|
|
||
|
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திடை |
|
|
அழைத்துப் புத்தபீடிகைகாட்டிப் பிறப்பு உணர்த்திய ] |
|
|
|
|
|
||
|
அரசன் உரிமையோடு அப்பொழில் புகுந்து | |
|
தரும சாவகன் தன்அடி வணங்கி | |
|
அறனும் மறனும் அநித்தமும் நித்தத் | |
|
திறனும் துக்கமும் செல்உயிர்ப் புக்கிலும் | |
5
|
சார்பில் தோற்றமும் சார்புஅறுத்து உய்தியும் | |
|
||
|
ஆரியன் அமைதியும் அமைஉறக் கேட்டுப் | உரை |
|
பெண்ணிணை இல்லாப் பெருவனப்பு உற்றாள் | |
|
கண்இணை இயக்கமும் காமனோடு இயங்கா | |
|
அங்கையில் பாத்திரம் கொண்டுஅறம் கேட்கும் | |
10
|
இங்குஇணை இல்லாள் இவள்யார் என்ன, | உரை |
|
||
|
காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் | |
|
நாவலம் தீவில்இந் நங்கையை ஒப்பார் | |
|
யாவரும் இல்லை இவள்திறம் எல்லாம் | |
|
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக் | |
15
|
கள்அவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் | |
|
||
|
காவிரிப் படப்பை நல்நகர் புக்கேன் | |
|
மாதவன் அறவணன் இவள்பிறப்பு உணர்ந்துஆங்கு | |
|
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன் | உரை |
|
ஆங்குஅவள் இவள்அவ் அகல்நகர் நீங்கி | |
20
|
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி | |
|
||
|
நின்கைப் பாத்திரம் என்கைப் புகுந்தது | |
|
மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் | |
|
அப்பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆவயிற்று | |
|
இப்பிறப்பு அறிந்திலை என்செய் தனையோ | உரை |
25
|
மணிபல் லவம்வலம் கொண்டால் அல்லது | |
|
||
|
பிணிப்புஉறு பிறவியின் பெற்றியை அறியாய் | |
|
ஆங்கு வருவாய் அரசநீ என்றுஅப் | |
|
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று | |
|
மைஅறு விசும்பின் மடக்கொடி எழுந்து, | உரை |
30
|
வெய்யவன் குடபால் வீழா முன்னர் | |
|
||
|
வான்நின்று இழிந்து மறிதிரை உலாவும் | |
|
பூநாறு அடைகரை எங்கணும் போகி | |
|
மணிபல் லவம்வலம் கொண்டு மடக்கொடி | |
|
பிணிப்புஅறு மாதவன் பீடிகை காண்டலும் | |
35
|
தொழுதுவலம் கொள்ளஅத் தூமணிப் பீடிகைப் | |
|
||
|
பழுதுஇல் காட்சி தன்பிறப்பு உணர்த்தக் | உரை |
|
காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரை | |
|
மாயம்இல் மாதவன் தன்அடி பணிந்து | |
|
தருமம் கேட்டுத் தாள்தொழுது ஏத்திப் | |
40
|
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் | |
|
||
|
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் | |
|
கலங்குஅஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் | |
|
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் | |
| ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் | உரை |
45
|
புலவன் முழுதும் பொய்இன்று உணர்ந்தோன் | |
|
||
|
உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும் | |
|
அந்நாள் அவன்அறம் கேட்டோர் அல்லது | |
|
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை | |
|
மாற்றுஅருங் கூற்றம் வருவதன் முன்னம் | |
50
|
போற்றுமின் அறம்எனச் சாற்றிக் காட்டி | |
|
||
|
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறைந்தீர் | உரை |
|
அவ்வுரை கேட்டுநும் அடிதொழுது ஏத்த | |
|
வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின் | |
|
பெரியவன் தோன்றா முன்னர்இப் பீடிகை | |
55
|
கரியவன் இட்ட காரணம் தானும் | |
|
||
|
மன்பெரும் பீடிகை மாய்ந்துஉயிர் நீங்கிய | |
|
என்பிறப்பு உணர்த்தலும் என்என்று யான்தொழ | உரை |
|
முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது | |
|
மற்றப் பீடிகை தன்மிசைப் பொறாஅது | |
60
|
பீடிகை பொறுத்த பின்னர் அல்லது | |
|
||
|
வானவன் வணங்கான் மற்றுஅவ் வானவன் | |
|
பெருமகற்கு அமைத்துப் பிறந்தார் பிறவியைத் | |
|
தரும பீடிகை சாற்றுக என்றே | |
|
அருளினன் ஆதலின் ஆயிழை பிறவியும் | |
65
|
இருள்அறக் காட்டும் என்றுஎடுத்து உரைத்தது | |
|
||
|
அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி | |
|
இன்றுஎனக்கு என்றே ஏத்தி வலம்கொண்டு | |
|
ஈங்குஇவள் இன்னணம் ஆக, இறைவனும் | உரை |
|
ஆங்குஅப் பொழில்விட்டு அகநகர்புக்குத | |
70
|
தந்தை முனியாத் தாய்பசு வாக | |
|
||
|
வந்த பிறவியும், மாமுனி அருளால் | |
|
குடர்த்தொடர் மாலை சூழாது ஆங்குஓர் | |
|
அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும், | |
|
மாமுனி அருளால் மக்களை இல்லோன் | |
75
|
பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும், | |
|
||
|
ஆய்தொடி அரிவை அமரசுந் தரிஎனும் | |
|
தாய்வாய்க் கேட்டுத் தாழ்துயர் எய்தி | |
|
இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம் | |
|
பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து | உரை |
80
|
செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க | |
|
||
|
அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி | |
|
நாடகம் கண்டு பாடல் பான்மையில் | |
|
கேள்வி இன்னிசை கேட்டுத் தேவியர் | |
|
ஊடல் செவ்வி பார்த்துநீ டாது | |
85
|
பாடகத் தாமரைச் சீறடி பணிந்து | |
|
||
|
தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி | |
|
அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி | |
|
நறுமுகை அமிழ்துஉறூஉம் திருநகை அருந்தி | |
|
மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்கக் | |
90
|
கருப்பு வில்லி அருப்புக்கணை தூவத் | |
|
||
|
தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து | |
|
தூஅறத் துறத்தல் நன்றுஎனச் சாற்றித் | உரை |
|
தெளிந்த நாதன்என் செவிமுதல் இட்டவித்து | |
|
ஏதம் இன்றாய் இன்று விளைந்தது | |
95
|
மணிமே கலைதான் காரண மாகஎன்று | |
|
||
|
அணிமணி நீள்முடி அரசன் கூற, | உரை |
|
மனம்வே றாயினன் மன்என மந்திரி | |
|
சனமித் திரன்அவன் தாள்தொழுது ஏத்தி, | |
|
எம்கோ வாழி என்சொல் கேள்மதி | |
100
|
நும்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் | |
|
||
|
பன்னீ ராண்டுஇப் பதிகெழு நல்நாடு | |
|
மன்உயிர் மடிய மழைவளம் கரந்துஈங்கு | |
|
ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகித் | |
|
தான்தனி தின்னும் தகைமையது ஆயது | உரை |
105
|
காய்வெங் கோடையில் கார்தோன் றியதுஎன | |
|
||
|
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல் | |
|
தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு | |
|
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது | |
|
ஊன்உடை உயிர்கள் உறுபசி அறியா | |
110
|
நீஒழி காலை நின்நாடு எல்லாம் | |
|
||
|
தாய்ஒழி குழவி போலக் கூஉம் | உரை |
|
துயர்நிலை உலகம் காத்தல் இன்றிநீ | |
|
உயர்நிலை உலகம் வேட்டனை ஆயின் | |
|
இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ | |
115
|
பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே | |
|
||
|
தன்உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஓம்பும் | |
|
மன்உயிர் முதல்வன் அறமும்ஈ தன்றால் | |
|
மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே | |
|
முதுமொழி கூற, முதல்வன் கேட்டு | உரை |
120
|
மணிபல் லவம்வலம் கொள்வதற்கு எழுந்த | |
|
||
|
தணியா வேட்கை தணித்தற்கு அரிதால் | |
|
அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் | |
|
ஒருமதி எல்லை காத்தல்நின் கடன்எனக் | உரை |
|
கலம்செய் கம்மியர் வருகெனக் கூஉய் | |
125
|
இலங்குநீர்ப் புணர் எறிகரை எய்தி | |
|
||
|
வங்கம் ஏறினன் மணிபல் லவத்திடைத் | |
|
தங்காது அக்கலம் சென்றுசார்ந்து இறுத்தலும் | உரை |
|
புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி | |
|
அரைசன் கலம்என்று அகமகிழ்வு எய்திக் | |
130
|
காவலன் தன்னொடும் கடல்திரை உலாவும் | |
|
||
|
தேமலர்ச் சோலைத் தீவகம் வலம்செய்து | |
|
பெருமகன் காணாய் பிறப்புஉணர் விக்கும் | |
|
தரும பீடிகை இதுஎனக் காட்ட, | உரை |
|
வலங்கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு | |
135
|
உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை | |
|
||
|
கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை | |
|
மைஅறு மண்டிலம் போலக் காட்ட | உரை |
|
என்பிறப்பு அறிந்தேன் என்இடர் தீர்ந்தேன் | |
|
தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் | |
140
|
மாரி நடுநாள் வயிறுகாய் பசியால் | |
|
||
|
ஆர்இருள் அஞ்சாது அம்பலம் அணைந்துஆங்கு | |
|
இரந்துஊண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு | |
|
அருந்துஊண் காணாது அழுங்குவேன் கையின் | |
|
நாடுவறம் கூரினும்இவ் ஓடுவறம் கூராது | |
145
|
ஏடா அழியல் எழுந்துஇது கொள்கென | |
|
||
|
அமுத சுரபி அங்கையில் தந்துஎன் | |
|
பவம்அறு வித்த வானோர் பாவாய்! | |
|
உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் | |
|
அணிதிகழ் அவிர்ஒளி மடந்தை நின்அடி | |
150
|
தேவர் ஆயினும் பிரமர் ஆயினும் | |
|
நாமாசு கழூஉம் நலம்கிளர் திருந்துஅடி | |
|
பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது | |
|
மறந்து வாழேன் மடந்தைஎன்று ஏத்தி, | |
|
மன்னவன் மணிமே கலையுடன் எழுந்து | |
155
|
தென்மேற் காகச் சென்று திரைஉலாம் | |
|
||
|
கோமுகி என்னும் பொய்கையின் கரைஓர் | |
|
தூமலர்ப் புன்னைத் துறைநிழல் இருப்ப | உரை |
|
ஆபுத் திரனோடு ஆயிழை இருந்தது | |
|
காவல் தெய்வதம் கண்டுஉவந்து எய்தி | |
160
|
அருந்துஉயிர் மருந்துமுன் அங்கையில் கொண்டு | |
|
||
|
பெருந்துயர் தீர்த்தஅப் பெரியோய் வந்தனை | |
|
அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர் | |
|
பின்நாள் வந்துநின் பெற்றிமை நோக்கி | |
|
நின்குறி இருந்து தம்உயிர் நீத்தோர் | |
165
|
ஒன்பது செட்டிகள் உடல்என்பு இவைகாண் | |
|
||
|
ஆங்குஅவர் இடஉண்டு அவருடன் வந்தோர் | |
|
ஏங்கிமெய் வைத்தோர் என்பும் இவைகாண் | உரை |
|
ஊர்திரை தொகுத்த உயர்மணல் புதைப்ப | |
|
ஆய்மலர்ப் புன்னை அணிநிழல் கீழால் | |
170
|
அன்புஉடை ஆர்உயிர் அரசற்கு அருளிய | |
|
||
|
என்புஉடை யாக்கை இருந்தது காணாய் | உரை |
|
நின்உயிர் கொன்றாய் நின்உயிர்க்கு இரங்கிப் | |
|
பின்நாள் வந்த பிறர்உயிர் கொற்றாய் | |
|
கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை. | உரை |
175
|
பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய | |
|
||
|
மடவரல் நல்லாய் நின்தன் மாநகர் | |
|
கடல்வயிறு புக்கது காரணம் கேளாய்: | உரை |
|
நாக நல்நாடு ஆள்வோன் தன்மகள் | |
|
பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் | |
180
|
பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய | |
|
||
|
புனிற்றுஇளங் குழவியொடு பூங்கொடி பொருந்திஇத் | |
|
தீவகம் வலம்செய்து தேவர்கோன் இட்ட | |
|
மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி, | உரை |
|
கம்பளச் செட்டி கலம்வந்து இறுப்ப | |
185
|
அங்குஅவன் பால்சென்று அவன்திறம் அறிந்து | |
|
||
|
கொற்றவன் மகன்இவன் கொள்கெனக் கொடுத்தலும் | |
|
பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்திப் | |
|
பழுதுஇல் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் | |
|
தொழுதனன் வாங்கித் துறைபிறக்கு ஒழியக் | |
190
|
கலங்கொண்டு பெயர்ந்த அன்றே கார்இருள் | |
|
||
|
இலங்குநீர் அடைகரை அக்கலம் கெட்டது | உரை |
|
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது | |
|
வடிவேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப, | |
|
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன் | |
195
|
நல்மணி இழந்த நாகம் போன்று | |
|
||
|
கானலும் கடலும் கரையும் தேர்வுழி | |
|
வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது | |
|
மணிமே கலாதெய்வம் மற்றுஅது பொறாஅள் | |
|
அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென | |
200
|
இட்டனள் சாபம் பட்டது இதுவால் | உரை |
|
||
|
கடவுள் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த | |
|
வடிவேல் தடக்கை வானவன் போல | |
|
விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க | |
|
ஒருதனி போயினன் உலக மன்னவன். | |
205
|
அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் | |
|
||
|
வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் | |
|
பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள் | |
|
உரைத்தன கேட்க உறுகுவை ஆயின்நின் | உரை |
|
மன்உயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம் | |
210
|
முன்னாள் எடுத்ததும் அந்நாள் ஆங்குஅவன் | |
|
||
|
அறஅரசு ஆண்டதும் அறவணன் தன்பால் | |
|
மறுபிறப் பாட்டி வஞ்சியுள் கேட்பைஎன்று | |
|
அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின், | உரை |
|
மன்னவன் இரங்கி மணிமே கலையுடன் | |
215
|
துன்னிய தூமணல் அகழத் தோன்றி | |
|
||
|
ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித் | |
|
தான்பிணி அவிழாத் தகைமையது ஆகி | |
|
வெண்சுதை வேய்ந்துஅவன் இருக்கையின் இருந்த | |
|
பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி | |
220
|
மன்னவன் மயங்க, மணிமே கலைஎழுந்து | உரை |
|
||
|
என்உற் றனையோ இலங்குஇதழ்த் தாரோய் | |
|
நின்நாடு அடைந்துயான் நின்னைஈங்கு அழைத்தது | |
|
மன்னா நின்தன் மறுபிறப்பு உணர்த்தி | |
|
அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் | |
225
|
நின்பெயர் நிறுத்த நீள்நிலம் ஆளும் | |
|
||
|
அரசர் தாமே அருள்அறம் பூண்டால் | |
|
பொருளும் உண்டோ பிறபுரை தீர்த்தற்கு | |
|
அறம்எனப் படுவது யாதுஎனக் கேட்பின் | |
|
மறவாது இதுகேள் மன்உயிர்க்கு எல்லாம் | |
230
|
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது | |
|
||
|
கண்டது இல்என, காவலன் உரைக்கும | உரை |
|
என்நாட் டாயினும் பிறர்நாட் டாயினும் | |
|
நல்நுதல் உரைத்த நல்அறம் செய்கேன் | |
|
என்பிறப்பு உணர்த்தி என்னைநீ படைத்தனை | |
235
|
நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான்என, | |
|
||
|
புன்கண் கொள்ளல்நீ போந்ததற்கு இரங்கிநின் | |
|
மன்பெரு நாடு வாய்எடுத்து அழைக்கும் | |
|
வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்என்று | |
|
அந்தரத்து எழுந்தனள் அணியிழை தான்என். | உரை |
|
||
|
ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை
முற்றிற்று. |
|
மேல் |