|
|
மள்ளர் குழீஇய விழவினானும், |
|
மகளிர் தழீஇய துணங்கையானும், |
|
யாண்டும் காணேன், மாண் தக்கோனை; |
|
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக் |
|
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த |
|
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே. |
உரை |
|
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி |
|
காலையும், பகலும், கையறு மாலையும், |
|
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப் |
|
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்: |
|
மா என மடலொடு மறுகில் தோன்றித் |
|
தெற்றெனத் தூற்றலும் பழியே; |
|
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே. |
உரை |
|
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |
|
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்; |
|
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ? |
|
இரந்தூண் நிரம்பா மேனியொடு |
|
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே. |
உரை |
|
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன் |
|
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
|
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
|
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
|
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
|
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
|
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
|
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. |
உரை |
|
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |
|
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
|
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
|
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
|
நுண் உறை அழிதுளி தலைஇய |
|
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. |
உரை |
|
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |
|
துறுகல் அயலது மாணை மாக் கொடி |
|
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன், |
|
நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என, |
|
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன் |
|
தாவா வஞ்சினம் உரைத்தது |
|
நோயோ-தோழி!-நின் வயினானே? |
உரை |
|
''வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்'' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர் |
|
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; |
|
பிடி பசி களைஇய பெருங் கை வேழம் |
|
மென் சினை யாஅம் பொளிக்கும் |
|
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. |
உரை |
|
தோழி, ''கடிது வருவர்'' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
|
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
|
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
|
குன்ற நாடன் கேண்மை என்றும் |
|
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
|
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
|
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
|
''வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
|
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
|
மலையுடை, அருஞ் சுரம்'' என்ப-நம் |
|
முலையிடை முனிநர் சென்ற ஆறே. |
உரை |
|
பிரிவிடை ''ஆற்றல் வேண்டும்'' என்ற தோழிக்கு, ''யாங்ஙனம் ஆற்றுவேன்?'' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |
|
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? |
|
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? |
|
யானும் நீயும் எவ் வழி அறிதும்? |
|
செம் புலப் பெயல் நீர் போல |
|
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. |
உரை |
|
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், ''பிரிவர்'' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார் |
|