|
|
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும், |
|
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், |
|
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே- |
|
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி, |
|
மாண் வரி அல்குல், குறுமகள் |
|
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே. |
உரை |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன் |
|
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது |
|
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி |
|
வான் தோய்வற்றே, காமம்; |
|
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே. |
உரை |
|
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ''யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?'' என்றது.- ஒளவையார் |
|
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், |
|
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய், |
|
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் |
|
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும் |
|
வாரார் போல்வர், நம் காதலர்; |
|
வாழேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன் |
|
அம்ம வாழி, தோழி! காதலர், |
|
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
|
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
|
பனி படு நாளே, பிரிந்தனர்; |
|
பிரியும் நாளும் பல ஆகுபவே! |
உரை |
|
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; ''சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |
|
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக் |
|
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல் |
|
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் |
|
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும் |
|
சூர் மலை நாடன் கேண்மை |
|
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே. |
உரை |
|
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர் |
|
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் |
|
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் |
|
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் |
|
வந்தன்று-வாழி, தோழி!-நாமும் |
|
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, |
|
''தான் மணந்தனையம்'' என விடுகம் தூதே. |
உரை |
|
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர் |
|
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன |
|
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!- |
|
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் |
|
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, |
|
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர் |
|
யாணர் ஊரனொடு வதிந்த |
|
ஏம இன் துயில் எடுப்பியோயே! |
உரை |
|
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார். |
|
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
|
கறவை கன்றுவயின் படர, புறவில் |
|
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
|
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
|
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |
|
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
|
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
|
புணரிய இருந்த ஞான்றும், |
|
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! |
உரை |
|
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |
|
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு |
|
யார் ஆகியரோ-தோழி!-நீர |
|
நீலப் பைம் போது உளரி, புதல |
|
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி, |
|
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த |
|
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று |
|
இன்னாது எறிதரும் வாடையொடு |
|
என் ஆயினள்கொல் என்னாதோரே? |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலம் கிழார் |
|