|
|
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
|
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
|
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
|
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
|
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
|
ஆராது பெயரும் தும்பி |
|
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. |
உரை |
|
''இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?''எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |
|
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, |
|
காண வந்து, நாணப் பெயரும்; |
|
அளிதோ தானே, காமம்; |
|
விளிவதுமன்ற; நோகோ யானே. |
உரை |
|
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தல் கார்க்கியன் |
|
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
|
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
|
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
|
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
|
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
|
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
|
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. |
உரை |
|
''நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுப் காஞ்சிக் கொற்றன் |
|
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய |
|
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் |
|
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி |
|
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச் |
|
செயலை முழுமுதல் ஒழிய, அயலது |
|
அரலை மாலை சூட்டி, |
|
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே. |
உரை |
|
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார் |
|
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
|
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
|
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
|
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
|
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
|
கொடு வரி இரும் புலி காக்கும் |
|
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. |
உரை |
|
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
|
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை |
|
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே; |
|
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும் |
|
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; |
|
''அன்னள் அளியள்'' என்னாது, மா மழை |
|
இன்னும் பெய்யும்; முழங்கி |
|
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே |
உரை |
|
பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன |
|
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
|
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
|
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?'' என |
|
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
|
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
|
ஐதேய் கம்ம யானே; |
|
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. |
உரை |
|
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |
|
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் |
|
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்; |
|
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; |
|
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!- |
|
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று |
|
இமைப்பு வரை அமையா நம் வயின் |
|
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே. |
உரை |
|
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன் |
|
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் |
|
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே; |
|
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே; |
|
''ஆங்கண் செல்கம் எழுக'' என, ஈங்கே, |
|
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத் |
|
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு |
|
இடம்மன்-தோழி!-''எந் நீரிரோ?'' எனினே. |
உரை |
|
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார். |
|
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
|
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
|
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
|
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
|
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
|
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
|
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை |
|
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
|